உலகம்

ஹலால் இறைச்சியை சாப்பிடும் உலகப் பணக்காரர் பில்கேட்ஸ்!

முகேஸ் அம்பானியை விட மிகப்பெரிய உலகப் பணக்காரர் பில்கேட்ஸ். இவரது சொத்து மதிப்பு சுமார் 9.50 லட்சம் கோடி ரூபாய். பில்கேட்ஸ் எது செய்தாலும், அது டிரெண்ட்டிங் தான். இந்த நிலையில், அண்மைக் காலமாக இந்தியாவில் அதிக சர்ச்சை ஏற்படுத்தி வரும், ஹலால் விவகாரத்தில் பில்கேட்ஸ் தனது கருத்தை பதிவிடும் விதமாக ஒரு காரியம் செய்துள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ஒரு சாலையோரக் கடையில், ஹாட் டாக் எனப்படும் பீட்ஸா போன்ற இறைச்சி உணவை சாப்பிட்டார். அந்த கடையில், வெளிப்படையாக ஹலால் செய்யப்பட்ட உணவு என எழுதப்பட்டிருந்தது.பில்கேட்ஸ் இதுபோன்ற இயல்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு அவரது பாதுகாப்புத்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட கடைகளை முழுமையாக ஆய்வு செய்து விடுவார்கள்.

அந்த வகையில், இந்த கடையையும் முன் கூட்டியே கண்காணித்து, அதற்கு பிறகே அங்கு பில்கேட்ஸ் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.இங்கு கவனிக்கப்படவேண்டியது, ஹலால் உணவுகளுக்கு எதிரான அவதூறு வெறுப்புப் பிரச்சாரங்கள், இந்தியாவிலும், உலக அளவிலும் பரவி வரும் நிலையில், பில்கேட்ஸ் ஹலால் உணவை நன்கு தெரிந்தே சாப்பிட்டுள்ளார் என்பது தான்.இதன் மூலம் ஹலால் உணவுகளின் முக்கியத்துவத்தை பில்கேட்ஸ் உலக மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

முன்னதாக இந்தியா வந்த பில்கேட்ஸ், சமூக வலைதளத் பிரபலம் டோலி சாய் வாலா என்பவரை, தனது ஹோட்டலுக்கு அழைத்து, தேநீர் தயாரிக்கச் சொல்லி, அதனைக் குடித்த வீடியோ வைரலானது. இதன் மூலம் டோலி சாய் வாலா, தனது வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button