வதந்தி பரப்பிய இயக்குநர் மோகன் கைது – பாஜக பிரமுகர்கள் பீதி!

பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக இயக்குநர் மோகன் ஒரு பேட்டியில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் பாஜக பிரமுகர்கள் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோரும் சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.இந்த நிலையில் இவர்கள் மீது பழனி உள்ளிட்ட இடங்களில் காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை ராயபுரம் காசிமேடு பகுதியில் உள்ள வீட்டில் இருந்து, இயக்குநரை மோகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருச்சி எஸ்பி வருண் குமார் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இயக்குநர் மோகன் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக தெரிகிறது.
பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரவுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன், அதில் ஒரு குறிப்பிட்ட தமிழ் சமூகத்திற்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்பியதாக அவர் மீது விமர்சனங்கள் உள்ளன.தொடர்ந்து, பாஜக, பாமக கட்சிகளுக்கு ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டு சமூக வலைதளங்களில் வலம் வந்தார். இதனிடையே அவர் கடைசியாக இயக்கிய பகாசூரன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. இதனால் சில நாட்கள் அரசியல் கருத்துக்கள் கூறாமல் இருந்து வந்த மோகன், தற்போது, மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.