உலகம்

இதுவரை இல்லாத சம்பவம்!

திங்கட்கிழமை ஒரே நாளில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலியானதோடு, 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களில், இதுவே மிகப்பெரிய தாக்குதலாககருதப்படுகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.இது இஸ்ரேலின் அப்பட்டமான இனப்படுகொலை என லெபனான் பிரதமர் நஜீம் மிகாடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மன்றம், பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வல்லரசு நாடுகள் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சுமார் 30 நிமிடங்களில் 80 இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் பிராந்திய போரை தொடங்கிவிடும் என துருக்கி அதிபர் எர்டோகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் 352 நாட்களாக நீடித்து வரும் இனப்படுகொலைகளை தடுக்க உலக நாடுகள் தவறி விட்டதாக தெரிவித்த எர்டோ கான், இஸ்லாமியர்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸா பள்ளி மீதான தாக்குதல்களை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.லெபனான் மீதான இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் முழு அளவிலான போரை பிராந்தியத்தில் ஏற்படுத்திவிடும் என எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அப்துல் லத்தி கண்டித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button