உலகம்

விரைவில் பொய்கள் அம்பலமாகும்!

முக்கிய கமாண்டர்கள் வீர மரணம் அடைந்துள்ள நிலையில், அடுத்த நாளே புதிய கமாண்டர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்” என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இதுகுறித்து உயிர்த்தியாகிகளின் இறுதித் தொழுகையில் கலந்து கொண்ட, லெபனான் நாடாளுமன்ற உறுப்பினரும், ஹிஸ்புல்லா தலைவருமான ஹசன் பத்லல்லா கூறியுள்ளதாவது, வான் வழித் தாக்குதல்கள் குறித்தும், இலக்குகள் குறித்தும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை இஸ்ரேல் பரப்பியுள்ளது.

இந்த போரின் முடிவில், இஸ்ரேல் கட்டவிழ்த்துள்ள பொய்கள் அம்பலமாகும்.ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களை முன்கூட்டியே முறியடிப்பதற்காக, இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக கூறிக்கொண்டு வருகிறது. ஆனால் ஹிஸ்புல்லா தனது திட்டங்களை எந்த இடையூறும் இன்றி தற்போதும் செய்து வருகிறது.

இஸ்ரேலின் ராணுவ இலக்குகளை முன் எப்போதும் இல்லாத அளவில் கடந்த சில நாட்களில் தாக்கியுள்ளோம். இஸ்ரேலின் தாக்குதல்கள் நம் மன உறுதியை ஒருபோதும் சிதைத்து விடாது. எதிரி எத்தகைய இழப்புகளை நமக்கு ஏற்படுத்தினாலும், அதில் இருந்து உடனடியாக மீண்டு வரும் அளவிற்கு, நம்மிடம், ஆயுதங்களும், யுக்திகளும், மனித வளமும், அனுபவமும், தைரியமும் உள்ளது. முழு அளவிலான போரை எதிர்கொள்ளும் முழுத் திறன்கள் நம்பிடம் உள்ளன.
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் வரை நம் தாக்குதல் தொடரும்.

இதனை இஸ்ரேலால் தடுக்க முடியாது. நம் கமாண்டர்கள் பலர் உயிர் தியாயம் செய்த அடுத்த நாளே, அனுபவம் மிக்க புதியவர்கள் அந்த இடத்தை நிரப்பி விட்டார்கள். ஒரு நாள் கூட நம் தலைமையில் வெற்றிடம் இல்லை.காலையில் பதவிக்கு வந்த நம் கமாண்டர்கள், இரவே தங்களது வேலைகளை கச்சிதமாக முடித்தார்கள். இந்தப் போரில் நம் இலக்குகளை அடைய நாம் துல்லியமாகவும், தைரியமாகவும், விவேகத்துடனும் செயல்பட்டு வருகிறோம். நாம் நம் இலக்குகளை நிச்சயம் அடைவோம். எதிரிகளின் தாக்குதல்கள் ஒரு போதும் நம்மை தடுத்துவிடாது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button