ஒருங்கிணைய வேண்டும் – துருக்கி அதிபர் அழைப்பு!

இஸ்ரேலை தடுத்து நிறுத்த ஒரே வழி…
இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்…
துருக்கி அதிபர் எர்டோகான் அழைப்பு…
இஸ்ரேல் கொள்ளை கும்பலின், நிலத் திருட்டு, ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, இஸ்லாமிய நாடுகள் கூட்டணி அமைக்க வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகான் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் மேலும் பேசியுள்ளதாவது, உதுமானிய சாம்ராஜ்யம் பாலஸ்தீன நிலத்தில் இருந்து 1918ஆம் ஆண்டு பிரிட்டனால் வெளியேற்றப்பட்டது. அன்று முதல் சியோனிச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடங்கின. பாலஸ்தீனியர்கள் தற்போது, காசா மற்றும் ரமல்லாவின் குறுகிய நிலங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என்ற எந்த பாரபசட்மும் இன்றி பாலஸ்தீனியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.
இது இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்குமான போர் அல்ல, இது சியோனிஸ்ட் நிலத் திருடர்களுக்கும், தங்கள் சொந்த நிலத்தை காக்க போராடும் முஸ்லீம்களுக்குமான போர்.
சில இஸ்லாமிய நாடுகளும், துருக்கியில் உள்ள சிலரும், இந்த போர் வெகுதொலைவில் நடைபெறுகிறது, எனவே நமக்கு எந்த பிரச்னையும் இல்லை என நினைக்கின்றனர். ஆனால் காசாவோடு தனது நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ளாது, அடுத்ததாக சிரியா, லெபனான் மற்றும் பிற முஸ்லீம் நாடுகள் என தொடர்ந்து கொண்டே இருக்கும். யூப்ரடிஸ் முதல் டைகரிஸ் நதி வரை தனது எல்லையை இஸ்ரேல் விரிவாக்கும்.
ஹமாஸ் காசா நிலத்தை காக்க மட்டும் போராடவில்லை. அவர்கள் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக போரிட்டு வருகின்றனர். இது தேசப்பற்று நடவடிக்கை. இஸ்லாமிய மார்க்க கடமை. இஸ்லாமிய நாடுகள் உறக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும். தற்போது, எகிப்து மற்றும் சிரியாவுடன் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து, துருக்கி அவர்களோடு கை கோர்த்துள்ளது. இதே போல் இஸ்ரேலுக்கு எதிராக பிற முஸ்லீம் நாடுகளும் எங்களோடு கை கோர்க்க வேண்டும்.
எகிப்துடன் நாம் கோர்த்திருப்பது, காசா மக்களுக்காகத் தான். நாம் தொடர்ந்து நம் நண்பர்களுடன் உறவை பலப்படுத்துவோம். இவ்வாறு துருக்கி அதிபர் எர்டோகான் பேசியுள்ளார்.
இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், துருக்கி அதிபர் மத்திய கிழக்கின் ஆபத்தான தலைவரான இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
==========