உலகம்

காசாவில் 10 லட்சம் மக்கள் பட்டினி! போலியோ ஆபத்தில் 5 லட்சம் குழந்தைகள்!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 337வது நாளை எட்டியுள்ளது.மத்திய மற்றும் தெற்கு காசாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா.வால் வழங்கப்படும் ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் 10 லட்சம் மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பேரழிவை விஞ்சிய துயரம் என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.காசாவில் மொத்தம் 6 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே போலியோ சொட்டு மருந்து, ஐ.நா.வால் கொடுக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. தெற்கு காசாவில் போலியா சொட்டு மருந்து கொடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என ஐ.நா. மன்ற அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.காசாவில் வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேற்குகரையில் கடந்த 10 நாட்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் படைகள் வெள்ளிக்கிழமை வெளியேறுவதாக அறிவித்துள்ளன. ஜெனின் நகரில் மட்டும் 14 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button