கோட் படத்தில் விஜயின் பெயர் காந்தி – ஏன்?

கோட் படம் பேசிய அரசியலில் ஒன்று ஹீரோ விஜயின் பெயர் எம்.எஸ். காந்தி.தற்போதைய இந்திய அரசியல் சூழலில் மகாத்மா காந்தியடிகள் பற்றிக்கூட பல விமர்சனங்களை வலதுசாரிகள் முன்வைத்து வருகின்றனர். மகாத்மா காந்தியின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு தங்களது மனதில் உள்ள வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் மகாத்மாவை கொன்ற கேட்சேவை அவர்கள் கதாநாயகனாக பார்க்கிறார்கள். காந்தியின் உருவப்படத்தை ரூபாய் நோட்டுக்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூட சிலர் பேசுகின்றனர்.அந்த அடிப்படையில் படத்தின் ஹீரோவிற்கு பெயர் காந்தி என வெங்கட் பிரபு சூட்டியுள்ளார்.
இனி காந்தி வில்லனாக பார்க்கப்படுவார் என வில்லன் கூற, அதற்கு பதிலடி கொடுக்கும் ஹீரோ, காந்தி எப்போதும் தேசத் தந்தை தான் என கூறும் வசனத்திற்க விசில் பறக்கிறது.தற்போது காந்தி என்ற பெயரை நேரு குடும்பத்தினர் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்திரா காந்தியை மிஸ் காந்தி என அழைப்பார்கள். அவரது பேரன் சஞ்சய் காந்தி.
எம்.எஸ். காந்தியான விஜய், தனது மகனுக்கு ஜீவன் என பெயர் வைத்த நிலையில், அந்த பெயரை சஞ்சய் என மாற்றி, சஞ்சய் காந்தியாக வில்லன் விஜய் வலம் வருவார்.நடிகர் விஜயின் விக்ரவாண்டி மாநாட்டிற்கு ராகுல்காந்தி வருவதாக கூறப்படுகிறது. எம்.எஸ். காந்தி, சஞ்சய் காந்தி, ராகுல்காந்தி இவற்றுக்கெல்லாம் ஏதாவது தொடர்புள்ளதா என்பது பின்னரே தெரியவரும்.