இந்திய உளவுப்பிரிவு தலைவராக இஸ்லாமியர்!

மாநாட்டைத் தொடர்ந்து, “கோட்”டிலும் சம்பவம்!இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்டு, தீவிரவாத பட்டம் சூட்டி, அரசியல் ரீதியாக காரியம் சாதிப்பவர்களை தோலுரித்து காட்டி இருப்பார் இயக்குநர் வெங்கட் பிரபு. தற்போது, கோட் படத்தில் ஒருபடி மேலே போய், உள் அரசியலை அம்பலப்படுத்தியுள்ளார்.வழக்கமாக திரைப்படங்களில் நாட்டிற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் என்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் சேர்ந்தவர்களைத் தான் காட்டுவார்கள்.
சில அரபு பெயர்களில் இயக்கங்களை குறிப்பிடுவார்கள்.அதே நேரம் கோட் திரைப்படத்தில் உண்மைக்கு நெருக்கமாக, அதாவது, இஸ்லாமியர்களில் சிலர் இந்திய நாட்டிற்கு செய்த தியாகங்கள், உயர் பிரிவினர் என்றும் தேச பக்தி மிக்கவர்கள் என்றும் பிம்பபப்படுத்தப்பட்ட சிலர், இந்தியாவிற்கு எதிராக செய்த துரோகங்களையும், இலைமறைவு காய்மறைவாக அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.
இந்தப் படத்தில் இந்தியாவிற்கு துரோகம் செய்து விட்டு, எதிரிகளுடன் கைகோர்த்து, அவர்களின் தலைவராக இருப்பவர் ராஜிவ் மேனன்.அதாவது நடிகர் மோகன். குறிப்பாக மேனன் என்றால் கேரளாவைச் சேர்ந்த பிராமண பிரிவினர் ஆவார்கள். கேரளாவைச் சேர்ந்த பிரபல இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்றதாக கூறி, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். நம்பி நாராயணன் கேரளாவைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப்படுகிறார். அதே நேரம் நம்பி நாராயணன் பிராமண பிரிவைச் சேர்ந்தவர் அல்ல.
இவரது வாழ்க்கை கதையை நடிகர் மாதவன், “ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்” என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருப்பார். இதனிடையே நம்பியை நினைவுகூறுவதற்காக, மேனன் என்ற பெயரை இடம்பெறச் செய்தார்களா என்று தெரியவில்லை.
அதே போல் தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவராக நடித்த ஜெய்ராம் நசீர் என்ற இஸ்லாமியராகவும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்பவராகவும் காட்டப்பட்டுள்ளார். இஸ்லாமியர்களை நாட்டிற்கு எதிரானவர்களாக பல இந்திய சினிமாக்கள் காட்டி வரும் நிலையில், அதற்கு தகுந்த எதிர்வினையை இயக்குநர் வெங்கட் பிரபு ஆற்றியுள்ளார்.