ஜமாத் இ இஸ்லாமி மீதான தடை நீக்கம் – வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு!

வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு அனுமதி…
ஷேக் ஹசீனா விதித்திருந்த தடையை நீக்கிய முகமது யூனுஸ்…
தீவிரவாதக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என விளக்கம்…
ஜமாத் இ இஸ்லாமி மற்றும் அதன் மாணவர் அமைப்பு உள்ளிட்ட அனைத்து துணை அமைப்புகள் மீதான தடையை நோபல் பரிசு பெற்ற அறிஞர் முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு உடனடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட அமைப்புகள் எந்தவித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட அமைப்புகள் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி ஷேக் ஹசீனா அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மாணவர் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு அவர் தப்பி ஓடிய நிலையில், இடைக்கால அரசு பதவி ஏற்றுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து தனி நாடாக வங்க தேசம் உருவெடுத்தது. இதற்கான போரில் பாகிஸ்தானின் ரசாக்கர் படையை எதிர்த்து சண்டையிட்டவர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
மேலும் இஸ்லாமிய சமயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஷேக் ஹசீனா அரசு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வந்ததாக கருத்து பரவியது. கடைசியாக நடந்த தேர்தலில் எதிர்கட்சிகளை ஒடுக்கி, பெரும் முறைகேடு செய்து தேர்தலில் வென்றதாகவும் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதுபோன்ற பல காரணங்களில் இணைந்து அவரது நீண்ட கால ஆட்சிக்கு முடிவுரை எழுதியது குறிப்பிடத்தக்கது.
===================