காசாவில் ஆக்கிரமிப்பு அதிகாரி பலி!

327வது நாளாக நீடிக்கும் காசா மீதான தாக்குதல்…
ஹமாசின் பதிலடியில் ஆக்கிரமிப்பு அதிகாரி பலி…
ஆக்கிரமிப்பு படையினர் தங்கிருந்த கட்டிடம் ஒன்றை குறிவைத்து, ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜன்னல் வழியாக உடல் போன்ற ஒன்று வெளியே தூக்கி வீசப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே தங்கள் தரப்பில் ஒரு ஆக்கிரமிப்பு அதிகாரி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைகள் அறிவித்துள்ளன.
இஸ்ரேலின் மூத்த படைப்பிரிவான நாகல் பிரிகேடின் அதிகாரி அமித் பிரெய்ட் மேன் என்பவர் தெற்கு காசாவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போதைய போரில் கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளது. எனினும் இது குறைவான எண்ணிக்கை என ஹமாஸ் கூறி வருகிறது.
இதனிடையே 327வது நாளாக நீடித்து வரும் போரில் காசாவில் கொடுமைகள் தொடர்ந்து வருகின்றன. மேற்கு கரையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் தெய்ர் அல் பலாவில் ஒரே நாளில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரபாவின் தல் அல் சுல்தான் பகுதியில் சுமார் 450 கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17,000. மொத்த காசா குழந்தைகளில் 2.6 சதவீதம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
===================