உலகம்

நூலிழையில் தப்பிய இஸ்ரேல் – வெளியான பரபரப்பு தகவல்கள்!

ஹிஸ்புல்லா தாக்குதலை சில மணி நேரங்களுக்கு முன்பு அறிந்த இஸ்ரேல்…
பெரும் தாக்குதலில் இருந்து நூலிலையில் தப்பி பிழைத்தது…

ஹிஸ்புல்லா தலைமை ராணுவத் தளபதி ஃபவுத் சுக்கூர் படுகொலைக்கு பழி தீர்ப்பதற்காக காத்திருந்த ஹிஸ்புல்லா, இமாம் ஹுசைன் நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமையை அதற்காக தேர்வு செய்தது. இதனை சில மணி நேரங்களுக்கு முன்பு அறிந்த ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில், ஹிஸ்புல்லாவின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களை குறிவைத்து, 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.

இதனையடுத்து சுதாரித்த ஹிஸ்புல்லா உடனடியாக தனது பதிலடி தாக்குதலை தொடுத்தது. இதில் 320க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், ஆள் இல்லா விமானங்கள் மூலம் இஸ்ரேலின் 11 முக்கிய ராணுவ நிலைகளை குறிவைத்து, தனது தாக்குதலை ஹிஸ்புல்லா நிகழ்த்தியுள்ளது. இதனால் இஸ்ரேலின் வடக்கு பகுதி கடும் சேதத்தை சந்தித்துள்ளது.

இந்த தாக்குதலில் இஸ்ரேலின் மத்திய பகுதியையும் ஹிஸ்புல்லா குறிவைத்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் அமைச்சரவையின் அவசரக் கூட்டம் பாதாள அறையில் நடைபெற்றது. இதில் 48 மணி நேர அவசர நிலைப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல் அவிவ், ஹைபா நகரங்களில் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இஸ்ரேல் முன்கூட்டியே ஹிஸ்புல்லாவின் ராக்கெட் லாஞ்சர்களை தகர்த்திருக்காவிட்டால், தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலை துளைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பேரழியில் இருந்து நூலிழையில் இஸ்ரேல் உயிர் தப்பியுள்ளது. அதே நேரம் எவ்வளவு நாட்கள் நெருப்பாற்றில் நீந்துவது என்ற கேள்வி இஸ்ரேலியர்களிடம் எழுந்துள்ளது.

=======

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button