உலகம்

ஒரே நேரத்தில் 2 நடவடிக்கை – ஒரு கப்பல் மூழ்கியது!

இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவு…
ஒரே நேரத்தில் 2 கப்பல்களை தாக்கிய ஹவுத்திக்கள்..
நடுக்கடலில் மூழ்கிய கப்பல்….

காசாவில் சுமார் 50 ஆயிரம் மக்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். காசா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை, செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என ஏமன் ஹவுத்திப்படைகள் அறிவித்தன.

இந்த தடையை மீறிச் சென்ற கப்பல்களை தொடர்ந்து தாக்கி, ஏற்கனவே 2 கப்பல்களை மூழ்கடித்துள்ளனர். இந்நிலையில் ஏமன் படைகளின் உத்தரவை மீறி, செங்கடல் வழியாக சென்ற கீரிஸ் நாட்டு ஆயில் கப்பலான சோ யூனியன் மீது ஆள் இல்லா போர் படகு மூலம் தாக்குதல் நடத்தினர்.

இதில் அந்த கப்பல் கேப்டனின் கட்டுப்பாட்டை இழந்து, தீப்பிடிக்க தொடங்கியது. அதில் இருந்த 22 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே நேரம் கப்பல் மூழ்கத் தொடங்கியதால், இழுவை கப்பல் மூலம் தீப்பிடித்த நிலையிலேயே இழுத்துச் செல்லப்பட்டது. தற்போது, அந்தக் கப்பலின் நிலை என்னவென்று தெரியவில்லை. முழுமையாக கடலில் மூழ்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதே போல் இஸ்ரேல் துறைமுகத்துக் சென்ற என்ற கப்பலை தாக்கியதாக ஹவுத்திக்கள் அறிவித்துள்ளனர். எனினும் இந்தப் கப்பல் சேதாரம் இன்றி, அருகே இருந்த துறைமுகத்திற்கு சென்று விட்டதாக பிரிட்டன் கடற்படை தெரிவித்துள்ளது.

ஏமனின் ஹோதைதா துறைமுகத்தை குறிவைத்து, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, இதனையடுத்து, தங்களது தாக்குதல்களை துல்லியமானதாக ஹவுத்திக்கள் மாற்றியுள்ளனர். இதனால் இஸ்ரேல் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button