உலகம்

ஓரு ஆண்டிற்குள் இஸ்ரேல் வீழ்ந்து விடும் – முன்னாள் ராணுவ ஜெனரல் பரபரப்பு பேட்டி!

காசா எனும் புதைகுழியில் மூழ்கத் தொடங்கியுள்ளோம்…
இஸ்ரேல் ராணுவ ஜெனரல் கண்ணீர்…
ஹமாஸை தோற்கடிக்க முடியவில்லை என ஒப்புதல்…

இஸ்ரேல் இன்னும் ஒரு ஆண்டுக்குள் வீழ்ந்து விடும் என அதன் முன்னாள் மேஜர் ஜெனரல் இஷாக் பிரிக் (Yitzhak Brik) தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ஊடகமான ஹாரெட்ஸ் (Haaretz) வெளியிட்டுள்ள கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது, ராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட் உண்மையை உணரத் தொடங்கியுள்ளார்.

உடனடியாக அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு, போர் முடிவுக்கு வராமல், ஹிஸ்புல்லாவுடன் புதிய போர் தொடங்கினால், அது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவர் அறிந்து கொண்டார்.
அதே நேரம் இந்தப் போரில் யோவ் கேலண்டும் பெரிய தவறுகளை செய்துள்ளார்.

போர் தொடங்குவதற்கு முன்பு, நாங்கள் காசாவை கைப்பற்றி விடுவோம். ஹமாஸ் சுரங்கங்களை அழித்து விடுவோம் என அவர் தெரிவித்தார். ஆனால் தற்போது, அந்த போர் இலக்குகளை இஸ்ரேல் இன்னும் அடையவில்லை.
கான் யூனுசை முழுமையாக கைப்பற்றிவிட்டோம் என்றும் யஹ்யா சின்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும், அவரது கட்டளைகளை ஏற்க ஹமாஸ் அமைப்பில் யாரும் உயிருடன் இல்லை போன்றெல்லாம் யோவ் கேலண்ட் குறிப்பிட்டிருந்தார். அது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

தற்போது, போரின் குறிக்கோள் தோல்வி அடைந்து விட்டதாக கேலண்ட் அறிந்துகொண்டார். ஹமாஸை தோற்கடிப்பது என்ற இலக்கில் தோல்வியை தழுவியதுடன், ஏராளமான வீரர்களையும் இழந்து விட்டோம். காசா எனும் புதைகுழியில் மூழ்கத் தொடங்கி விட்டோம். நெதன்யாகுவும், ராணுவத் தளபதி ஹெலேவியும் சேர்ந்து, இஸ்ரேலை பேரழிவை நோக்கி, கொண்டு சென்று வருகின்றனர்.

நெதன்யாகுவையும், அவரது தீவிர வலதுசாரி கூட்டணி அரசையும் உடனடியாக தூக்கி எறியா விட்டால், அவர்கள் இஸ்ரேலின் இருப்பையே கேள்விக் குறியாக்கி விடுவார்கள், மீள முடியாத இடத்திற்கு இஸ்ரேலை கொண்டு சென்று விடுவார்கள்.
இவ்வாறு அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button