உலகம்

இஸ்ரேல் மீது தரைவழித் தாக்குதல் – ஈரான் சூசக அறிவிப்பு!

ஐ.நா.வுக்கான ஈரான் தூதுக்குழு மெஹர் ஊடகத்திடம் கூறியுள்ளதாவது, ஈரானின் பதிலடி 2 தெளிவான விளைவுகளை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளது.முதலில் அந்த பதிலடியானது, இஸ்மாயில் ஹனியேவின் படுகொலையை தெஹ்ரானில் நிகழ்த்தி இருப்பதன் மூலம் ஈரானின் இறையான்மை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கான பதிலடியாக முதல் தாக்குதல் இருக்கும்.

இரண்டாவது தாக்குதல் ஈரானின் தடுப்பு சக்தியை நிலை நிறுத்துவதாக அமையும், இஸ்ரேல் தனது தாக்குதலுக்கு வருந்தக் கூடிய ஒன்றாகவும், திருப்பித் தாக்குவது பற்றி யோசிக்கவே முடியாத அளவுக்கு ஒன்றாக இருக்கும். அதே போல் ஈரானின் தாக்குதல் காசா பேச்சுவார்த்தைக்கு குந்தகம் விளைவுக்கும் வகையில் இருக்காது. ஈரானின் தாக்குதல் தகுந்த நேரத்தில் தகுந்த முறையில் நடத்தப்படும். அது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.

அவர்கள் வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் போது, ராடார் கருவிகளின் திறையை பார்த்துக் கொண்டிருக்கும் போது, தரை வழியாக அவர்களுக்கு பதிலடி கிடைக்கும். ஒரு வேளை, இந்த இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்கலாம். இவ்வாறு ஐ.நா.வுக்கான ஈரானின் தூதர் அலுவலகம், மெஹர் ஊடகத்திடம் கூறியுள்ளதாக, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button