உலகம்

முதல் முறையாக இஸ்ரேல் நகரத்தை நேரடியாக தாக்கிய ஹிஸ்புல்லா!

லெபனான் நகரங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி…
புதன்கிழமை காலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ஹிஸ்புல்லா…
ஒரு மணி நேரத்தில் 50 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்…

லெபனானின் பெக்கா நகரம் மீது இஸ்ரேல் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இதற்கு பதிலடியாக புதன்கிழமை காலை இஸ்ரேலின் கோலன் குன்றுகளில் உள்ள Katzrin என்ற நகரம் மீது 50 கத்தியுஷா ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில ராக்கெட்டுகளை மட்டுமே இஸ்ரேலால் தடுக்க முடிந்துள்ளது.

சில ராக்கெட்டுகள் அங்குள்ள குடியிருப்புகளில் நேரடியாக விழுந்துள்ளன. இதில் ஒருவர் காயம் அடைந்துள்ளதாகவும், பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக ஆக்கிரமிப்பு ராணுவம் கூறியுள்ளது.
கடந்த 10 மாதங்களாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகளை எதிர்த்து, லெபனான் இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதிகளை தாக்கி வருகிறது.

இந்தப் போரில் இதுவரை முக்கியத் தளபதிகள் உட்பட 420 வீரர்களை ஹிஸ்புல்லா இழந்துள்ளது. அதே நேரம் இஸ்ரேல் தரப்பிலும் பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் ஆக்கிரப்பாளர்கள், எல்லைப்புறங்களில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button