ஹிஸ்புல்லா ஆக்ரோஷ நடவடிக்கை – ஆக்கிரமிப்பு அதிகாரி பலி, 10 பேர் காயம்!

வழக்கம் போல் திங்கட்கிழமையும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டது. இதில் இஸ்ரேல் பல்வேறு ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டன.யா அரா என்ற ஆக்கிரமிப்பு செட்டில்மென்ட் கிராமம் மற்றும் செயின்ட் ஜீன் ஆக்கிரமிப்பு கிராமங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து, திங்கட்கிழமை ஹிஸ்புல்லா ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.யா அராவில் 300வது பிராந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளதாகவும், செயின்ட் ஜீனில் இருந்து, வடக்கு ராணுவ தலைமையகத்திற்கு போர் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.
மேலும் சாரிட் ஆக்கிரமிப்பு ராணுவ பாசறையை குறிவைத்து நடத்தப்பட்ட, டிரோன் மற்றும் ராக்கெட் தாக்குதலில், அப்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.மேலும் மேற்கு அல் ஜலீலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணுவ நிலை மீது ஹிஸ்புல்லா வீசிய டிரோன் மூலம் ஆக்கிரமிப்பு வீரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக ஆக்கிரமிப்புஊடகங்கமான Hadshot Hamot செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் யா அரா பகுதி மீது ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதல் கடுமையான ஒன்று என்றும் செட்டில்மென்ட் பகுதிகளை டிரோன்கள் மற்றும் ராக்கெட்டுகள் நேரடியாக தாக்கியதாகவும் அந்த செய்தி விவரித்துள்ளது.
இதே போல் நகாரியா நகர் மீது இந்த முறை நடத்தப்பட்ட தாக்குதல் முன் எப்போதும் இல்லாத ஒன்று என்றும் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக ஆக்கிரமிப்பு ஊடகமான Maariv செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் சமீபத்திய ஆக்ரோஷ தாக்குதல்கள், வடக்கு இஸ்ரேலில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆக்கிரமிப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த சனிக்கிழமை அப்பர் அல் ஜலீல் பகுதியில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில், உயர் அழுத்த மின் அமைப்புகள் பாதிக்கப்பட்டு, அப்பகுதி இருளில் மூழ்கியது.
பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. பல பகுதிகளில் தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி தொடர்ந்து ஒலித்தன.அப்பகுதியில் உள்ளவர்கள் இன்னும் வெளியேற்றப்படாததால் பெரும் மக்கள் தொகை அங்கு இருந்துள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர்.இதேப் போல் திங்கட்கிழமை பிற்பகலில் Shebaa Farms பகுதியில் உள்ள Zebdine ஆக்கிரமிப்பு ராணுவ பாசறை மீது ஹிஸ்புல்லா நடத்திய artillery shells தாக்குதல், இலக்கை நேரடியாக தகர்த்ததாக லெபனான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ரமிம் ராணுவத் தளத்தை தங்களது மிசல்ஸ் நேரடியாக தாக்கியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.