இந்தியா

மோகனூரில் பிறந்து மும்பையில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்!

விவசாய குடும்பம், அரசுப் பள்ளியில் படிப்பு…
இப்போது, 100 கோடிக்கு அம்பானி வீட்டு அருகே பங்களா…
கல்வியால் உயர்ந்த தமிழர் மோகனூர் சந்திரசேகரின் தன்னம்பிக்கை கதை…

அப்துல் கலாமை போல, கல்வியால், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள பலரில் முக்கியமானவர் சந்திரசேகரன். சிற்றூரில் பிறந்து, இன்று, இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான அம்பானியின் பக்கத்து வீட்டுக் காரராக முன்னேறியுள்ளார். அவரது தன்னம்பிக்கையூட்டும் பின்னணி குறித்து சுருக்கமாக பார்க்கலாம்…

1963ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் மோகனூரில் விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்தவர். Coimbatore Institute of Technology இல் இளங்கலையில் Applied Sciences படித்தவர். திருச்சி Regional Engineering College இல் MCA படித்தார்.

1987 ஆம் ஆண்டு TCSஇல் இணைந்தார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் அறிவாற்றல் திறனால், அந்த நிறுவனத்தின் COO வாக 2007 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார். 2009 ஆம் ஆண்டு அதாவது இரண்டே ஆண்டுகளில் TCS இன் CEO வாக தனது 46 வயதில் பதவி உயர்வு அடைந்தார்.

Tata Sons நிறுவன தலைமை பதவியில் இருந்து Ratan Tata விலகும் போது, தனது நம்பிக்கைக்குரியவரான சந்திரசேகரிடம் chairman பதவியை ஒப்படைத்தார்.

2019ஆம் ஆண்டு அவரது சம்பளம் 65 கோடி ரூபாய். 2022ஆம் ஆண்டு 109 கோடியாகவும், 2023ஆம் ஆண்டு 113 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இது லாபத்தில் அவரது பங்கான 100 கோடி ரூபாயையும் சேர்த்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா மாளிகை அருகே, டியூபிளக்ஸ் வீடு ஒன்றை சந்திரசேகர் வாங்கியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 98 கோடி ரூபாய். எளிய பின்னணியில் இருந்து, கல்வி, அர்ப்பணிப்பு, திறமை மூலம் வளர்ந்த இவரது சுய சரிதை நெட்பிளிக்ஸ் தளத்தில் டாக்குமென்டரியாக வெளிவந்துள்ளது.

இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா பேசியுள்ளார். தற்போது, ஆந்திர மாநில முதலமைச்சர், சந்திரபாபு நாயுடு அமைத்துள்ள, தொழில் துறையினருக்கான டாஸ்க் போர்ஸ் அமைப்பில் துணைத் தலைவராக சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button