உலகம்

வடக்கு இஸ்ரேலுக்குள் புக ஹிஸ்புல்லா திட்டம்! ஆக்கிரமிப்பு கமாண்டர்கள் எச்சரிக்கை!

இஸ்ரேலின் வடக்கு எல்லைக்குள் புகுந்து ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த திட்டம்!

வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர்களின் எச்சரிக்கையால் பரபரப்பு…

ஹிஸ்புல்லாவின் ரதுவான் சிறப்பு படைப்பிரிவு இஸ்ரேலின் வடக்கு எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் திட்டத்தை வைத்திருப்பதாக வடக்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கமாண்டர்கள் அந்நாட்டின் ஊடகமான வல்லாவிற்கு பேட்டி அளித்துள்ளனர்.

அவர்கள் கூறியுள்ளதாவது,

ஹிஸ்புல்லாவின் ரதுவான் படைப்பிரிவு வடக்கு எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது நிதர்சனமாகியுள்ளது.

ஒருங்கிணைந்த தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள ரதுவான் படைப்பிரிவு பலம் பெற்ற ஒன்றாக உள்ளது.

அப்படி ஊடுருவும் போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு செட்டில்மெண்டுகள் ராணுவ சாவடிகளை ஹிஸ்புல்லா படைகள் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அவர்களுக்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான போதிய பயிற்சியோ, அல்லது பலமோ இல்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் கற்பனையானது.

ஹிஸ்புல்லாவின் ரதுவான் படை பிரிவால் நிச்சயம் வடக்கு எல்லைக்குள் ஊடுருவ முடியும்.
ராணுவ சாவடிகளை கைப்பற்ற முடியும். அங்கு ஹிஸ்புல்லாவின் கொடிகளை அவர்களால் நட முடியும். ராணுவ கட்டிடங்களை அவர்களால் தகர்க்க முடியும்.
இதனை மனதில் வைத்து இஸ்ரேல் ராணுவம் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வல்லா ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.

ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே முழு அளவிலான ஓர் வெடித்தால் என்ன ஆகும் என்பது குறித்து இஸ்ரேலில் வடக்கு எல்லை இராணுவம் அப்பகுதிகளை சேர்ந்த மேயர்களுக்கு பாதுகாப்பு துறை சார்ந்த ஆவணங்களை வழங்கியது.

இந்த நிகழ்வை தொடர்ந்து வடக்கு இஸ்ரேலின் ராணுவ கமாண்டர்கள் அளித்த பேட்டியை வல்லா என்ற ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ஊடகம் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button