உலகம்

உச்சத்தை தொட்ட ஈரான் மீதான அச்சம்! இஸ்ரேலை காக்க நீர் மூழ்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா!

காசா அமைதிப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.அதற்கு முன்பாகவே ஈரான் அளித்த வாக்குறுதியின் படி இஸ்ரேல் மீது அந்நாடு தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து அமெரிக்காவிடம் பேசி உள்ள இஸ்ரேலிய தலைவர்கள் இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலால் தனித்து ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது என்பது உலகத்திற்கு தெரிந்த உண்மை.

ஏற்கனவே இஸ்ரேலை காக்க 12 போர்க்கப்பல்கள், போர் விமானங்களை சுமந்து செல்லும் 2 பிரம்மாண்ட விமானம் தாங்கிய போர்க்கப்பல்கள், 4000 வீரர்கள் உள்ளிட்ட படைகள் மற்றும் ஆயுதங்களை மத்திய கிழக்குக்கு அமெரிக்கா அனுப்பியது.

இந்நிலையில் தற்போது கூடுதலாக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அனுப்பியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து எதிரிகளின் இலக்கை நோக்கி ஏவுகணைகளை ஏவ முடியும்.

ஏற்கனவே இரண்டு விமானம் தாங்கிய பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது 3 வதாக ஆபிரகாம் லிங்கன் கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹிஸ்புல்லா தனது ஆயுதங்களை முழு அளவில் தயாரிப்பில் வைத்துள்ள செய்தியும் வெளியானது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button