1 மணி நேரத்தில் 23 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் – ஐயன் டோம் தகர்ப்பு!

வியாழக்கிழமை இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்திய அதிரடித் தாக்குதல்…
ஐயன் டோம் பேட்டரி தகர்ப்பு… 19 ஆக்கிரமிப்பு வீரர்கள் படுகாயம்…
புதன்கிழமை ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் ஆக்கிரமிப்பு வீரர்கள் 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், வியாழக்கிழமை ஹிஸ்புல்லா நடத்திய தாக்குலில் ஐயன் டோம் பேட்டரி தகர்க்கப்பட்டதோடு, Biranit என்ற ஆக்கிரமிப்பு ராணுவ பாசறை தகர்க்கப்பட்டதாக லெபனான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
காசா மக்களுக்காக தானாக முன்வந்து, இஸ்ரேல் மீது லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் கடுமையான பதிலடியால் இதுவரை 400க்கும் மேற்பட்ட வீரர்களை ஹிஸ்புல்லா இழந்துள்ளது. இருப்பினும் இஸ்ரேல் மீதான வரையறுக்கப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் லெபனான் ஊடகமான அல் மாயதீன் வெளியிட்டுள்ள செய்தியில், வியாழக்கிழமை ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு மேற்கு அல் ஜலீல் பகுதி மீது ஹிஸ்புல்லா கொத்து கொத்தாக ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. ஒரு மணி நேரத்தில் 23 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. இதில் ஐயன் டோம் பேட்டரி, மற்றும் ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோட் செட்டில்மென்ட் பகுதி மீதும் கொத்து கொத்தாக ராக்கெட்டுகளை ஏவியுள்ளது.300வது படைப்பிரிவு தலைமை அலுவலகம் மீது புர்கான் ராக்கெட்டுகளை கொத்து கொத்தாக ஏவியதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
Biranit பகுதியில் அமைந்துள்ள 91வது டிவிசன் ராணுவ தலைமையகம் மீது புர்கான் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், அந்த பாசறை தீப்பற்றி எரிந்து அழிந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. அடுத்ததாக ரமீம் ராணுவ பாசறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்களது ஆயுதம் இலக்கை நேரடியாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதன்கிழமை இரவு ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில், ஆக்கிரமிப்பு ராணுவத்தின் அல் மர்ஜ் பாசறை தகர்க்கப்பட்டு, அதில் இருந்த பலர் உயிரிழந்ததிருக்கலாம், அல்லது காயம் அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் தான் 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு படையினர் காயம் அடைந்ததை இஸ்ரேல் ஒப்புக் கொண்டது.
இதே போல் அன்றைய தினம், ருஷைத் அல் ஆலம் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி, உளவுத்துறை கருவிகளை அழித்ததாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
=====