உலகம்

22 வருட சிறை வாழ்க்கை – 10 மாதம் குகை வாழ்க்கை! யார் இவர்?

22 வருடம் இஸ்ரேல் சிறையில் கழித்தவர்…
10 மாதங்களாக வலை வீசி தேடப்படுபவர்…
யார் இந்த யஹ்யா சின்வர்?

காசா பகுதி தலைவராக இருந்த யஹ்யா சின்வரை, சர்வதேச அரசியல் குழுத் தலைவராக நியமித்துள்ளது ஹமாஸ். யார் இந்த யஹ்யா சின்வர் என்பதை பார்க்கலாம். பாலஸ்தீன நகரமான அஸ்கெலானை 1948ஆம் ஆண்டு கைப்பற்றிய யூதப்படைகள், அங்கிருந்த பாலஸ்தீனியர்களை விரட்டியத்து, இஸ்ரேல் என்ற நாட்டை அறிவித்தனர்.

அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களில் யஹ்யா சின்வரின் பெற்றோர்களும் அடங்குவர். யஹ்யா சின்வர் கான்யூனிஸ் அகதிகள் முகாமில் 1962 ஆம் ஆண்டு பிறந்தவர். காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வீரர்கள் 2 பேர் மற்றும், உளவாளிகள் 2 பேரை கொன்ற வழக்கில் இஸ்ரேல் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Yahya Sinwar's Exorbitant Demands

இவருக்கு 4 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. இதனால் 22 ஆண்டுகளை இஸ்ரேல் சிறைச்சாலையில் கழித்தவர். அங்கு யூதர்களின் மொழியான ஹீப்ருவை கற்று, ஹீப்ரு மொழியில் உள்ள இஸ்ரேல் சின்பெட் உளவுத்துறை அதிகாரிகள் எழுதிய புத்தகங்களை படித்துள்ளார்.

யூதர்களின் அரசியல் தொடர்பான பல புத்தகங்களை படித்தவர். அங்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கட்டி நீக்கப்பட்டு, மறுபிறவி எடுத்துள்ளார். சிறைச்சாலையை பாலஸ்தீனியர்களுக்கு கல்லறையாக மாற்ற விரும்புகின்றனர், ஆனால் நாம் அதனை நூலகமாகவும், வழிபாட்டுத் தலமாகவும் மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Who is Yahya Sinwar, the Hamas leader Israel has called a 'dead man walking' | CNN

சிறைச்சாலையில் இருந்து தப்ப பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும், அது தோல்வியடைந்த நிலையில், அவருக்கு உதயமான ஒரு யோசனை தான், இஸ்ரேல் ராணுவத்தினரை கடத்தும் நடவடிக்கை. இதன் அடிப்படையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒரு வரை கடத்தி, அவருக்கு பதிலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரை விடுவிக்க வைத்தனர். அப்படி 22 ஆண்டுகள் கழித்து விடுதலை ஆனவர் தான் யஹ்யா சின்வர்.

இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்கவே, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்ரேலியர்களை பணய கைதிகளை பிடித்துச் சென்றதாகவும் ஹமாஸ் விளக்கம் அளித்தது.

காசா பகுதியின் ஹமாஸ் தலைவராக இருந்த யஹ்யா சின்வர், கடந்த 10 மாதங்களாக சுரங்கத்திற்குள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. தற்போது, அவரை சர்வதேச அரசியல் பிரிவு தலைவராக அறிவித்திருப்பதன் மூலம் இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடியை ஹமாஸ் ஏற்படுத்தியுள்ளது.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button