“ஹமாஸ் பட்டாலியன்கள் இன்னும் பலத்துடன் உள்ளன” அமெரிக்க சி.என்.என். ஊடகம் அறிவிப்பு!

ஹமாசின் பலம் குறைந்து விட்டதாக கூறுவது தவறு…
இஸ்ரேல் வெளியிடும் தகவல்களில் உண்மையில்லை…
ஆணித்தரமாக ஆதாரத்தை காட்டும் அமெரிக்க ஊடகம்…
ஹமாஸ் அமைப்பு பெருமளவில் வீழ்த்தப்பட்டு விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுவதில் உண்மை இல்லை என அமெரிக்காவின் முன்னணி ஊடகமான சி.என்.என். தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுதந்திர ஆய்வை நடத்தியுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து சி.என்.என். கூறியுள்ளதாவது, ஹமாஸ் மொத்தம் 24 பட்டாலியன்களை கொண்டிருந்தது. இதில் வெறும் 3 பட்டாலியன்கள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளன. இன்னும் 8 பட்டாலியன்கள் முழு பலத்துடன் உள்ளன. பிற பட்டாலியன்கள் கலைக்கப்பட்டுள்ளன. மேலும் ஹமாஸ் புதிய பட்டாலியன்களை உருவாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி, 304 நாட்கள் ஆகும் நிலையில், இன்னும் ஹமாஸ் பிடியில் உள்ள சுமார் 111 பணய கைதிகளை இஸ்ரேலால் மீட்க முடியவில்லை. கடந்த 10 மாதங்களாக இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலில், சுமார் 40 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையிலும், பணய கைதிகளை இன்னும் மீட்க முடியவில்லை.
தற்போதும், இஸ்ரேலை எதிர்த்து, ஹமாஸ் அமைப்பு ராக்கெட் வீசி வருகிறது. இதனால் இஸ்ரேலில் அபாய எச்சரிக்கை ஒலி எழுந்து வருகிறது. எனவே இவ்வளவு பெரிய இனப்படுகொலைகளை அரங்கேற்றியும், இஸ்ரேலால் அதன் போர் இலக்குகளை அடைய முடியவில்லை. தற்போது, ஈரானின் பெரும் தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ள உள்ளது.
====