ஈரானின் ஏவுகணைகளை தடுக்க மாட்டோம் – எகிப்து அறிவிப்பால் இஸ்ரேல் அதிர்ச்சி!

அமெரிக்க கூட்டணியில் இருந்து விலகிய எகிப்து…
ஈரான் வீசும் ராக்கெட்டுகளை தடுக்க மாட்டோம் என அறிவிப்பு…
இஸ்ரேல் மீது அதிரடித் தாக்குதலை நடத்தப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இஸ்ரேலில் கடும் பீதி நிலவுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் கூட்டாளியான எகிப்து, இந்த முறை, இஸ்ரேலை நோக்கி ஈரான் வீசும் ஏவுகணைகளை தடுக்க முடியாது என அறிவித்துள்ளது.
இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் கடந்த ஏப்ரல் மாதம் முதன் முறையாக ஈரான் இஸ்ரேல் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தியது. ஆனால் ஈரான் வீசிய ஏவுகணைகளை அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகள், தங்களது வான் வழியில் சுட்டு வீழ்த்தின. இதனால் பாதிப்பில் இருந்து முழுவதுமாக இஸ்ரேல் தப்பியது.
தற்போதும், ஈரான் நடத்தும் தாக்குதலையும், அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் தடுத்து நிறுத்துவார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில், முதல் நாடாக எகிப்து, இந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஹவுத்திப்படைகளை ஒடுக்க, அமெரிக்க அமைத்த கூட்டணியில் இருந்தும், எகிப்து, சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் விலகின.
இந்நிலையில் ஈரான் வீசும் ஏவுகணைகளை இந்த நாடுகள் தடுக்காவிட்டால், அது இஸ்ரேலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாதுகாப்பு கருதி, ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் மூத்த அரசியல் தலைவர்கள் பல நாட்கள் தொடர்ந்து தங்குவதற்கு பதுங்கு குழிகள் தயார் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.