ஈரான் நடவடிக்கை இன்னும் 24 மணி நேரத்தில் தொடங்கும் – அமெரிக்கா தகவல்

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பதிலடி நடவடிக்கை…
இன்னும் 24 மணி நேரத்தில் தொடங்கலாம்…
அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை…
ஈரானின் கடும் பதிலடி எச்சரிக்கை இஸ்ரேலியர்களை ஆழ்ந்த பீதியில் ஆழத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஆக்சியோஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஈரான் இன்னும் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் தனது நடவடிக்கை தொடங்கலாம் என தெரிவித்துள்ளார்.
எனினும் முழு அளவிலான போர் வெடிப்பதை தடுக்க, அமெரிக்காவும், அதன் அரபு கூட்டாளி நாடுகளும் தேவையானவற்றை செய்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஈரானின் கோபத்தை தணிக்கும் நடவடிக்கையில் ஜோர்டான் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சபாடி என்பவர், 20 ஆண்டுகளில் முதன் முறையாக ஈரானுக்கு பயணம் மேற்கொண்டார்.அதே நேரம் தான் இஸ்ரேலின் தூதுவராக ஈரானுக்குச் செல்லவில்லை என்றும், இரு நாட்டு உறவுகள், அண்மை நிகழ்வுகள் பற்றி விவாதிக்கவே அங்கு சென்றதாக குறிப்பிட்டார்.
ஈரான் இந்த முறை மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை பல நாட்களுக்கு தொடர்ந்து நீடிக்கலாம் என்றும் ஒரே நேரத்தில், ஏமன், லெபனான், ஈராக், சிரியா, ஈரானில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இஸ்ரேலியர்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள் உயிர்களை பாதுகாக்க சுரங்க பதுங்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் சனிக்கிழமை தொடங்கி, திங்கட்கிழமை காலை வரை இஸ்ரேலின் வடக்கு, மற்றும் தெற்கு பகுதிகளில் தொடர்ந்து, அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஹிஸ்புல்லாவின் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாக இந்த அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா தாக்குதலில், இஸ்ரேலின் ரம்யா ராணுவ உளவு மையம் அழிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
=====