உலகம்

ஈரான் நடவடிக்கை அச்சம் – சுரங்கத்திற்குள் பதுங்கிய இஸ்ரேல் தலைவர்கள்!

நீண்ட போருக்கு தயாராகும் ஈரான்…
சுரங்கத்திற்குள் தஞ்சமடைந்த இஸ்ரேல் தலைவர்கள்…

ஈரான் அடுத்த 24 மணி நேரத்தில் தனது தாக்குதலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஈரான் நடத்தும் தாக்குதல், இதுவரை இல்லாத ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஆக்கிரமிப்பு இஸ்ரேலை காக்க அமெரிக்க 12 போர்க்கப்பல்கள், 3 விமானம் தாங்கிய போர்க்கப்பல்கள், 4 ஆயிரத்திற்கும் மேலாக கூடுதல் படைகளை மத்திய கிழக்கிற்கு அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் அவசர காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் உளவுத்துறையான சின்பெட், முக்கிய இஸ்ரேல் தலைவர்களுக்கு பதுங்கு அறைகளை அமைத்துள்ளது.

வானில் இருந்து வீசப்படும், ராக்கெட்டுகள், வெடி குண்டுகள் தாக்காத வகையில் ஆழமாக இந்த பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானும், அதன் கூட்டணி படைகளும் பல நாட்கள் தொடர் தாக்குதலை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஏற்றார் போல், பதுங்கு குழிகளில் இருந்து கொண்டே, ஆக்கிரமிப்பு படைகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் வகையில்,நீண்ட கால அடிப்படையில் இந்த சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு அறை, தகவல் தொடர்பு மையம் போன்ற வசதிகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காசாவில் போராளிக்குழுக்கள் சுரங்கங்களில் இருந்து செயல்பட்ட நிலையில், தற்போது, அதே நிலைக்கு இஸ்ரேலும் தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button