உலகம்

எங்களை தொட்டால் அமெரிக்கா வரும் – துருக்கியிடம் பம்மும் இஸ்ரேல்!

சதாமின் நிலை எர்டோகானுக்கு ஏற்படும் என அச்சுறுத்தும் இஸ்ரேல்…
ஹிட்லருக்கு ஏற்பட்ட கதி நெதன்யாகுவிற்கு ஏற்படும் என துருக்கி பதிலடி..

காசா மீதான தாக்குதலை நெதன்யாகு தொடர்ந்தால், துருக்கி படைகள், இஸ்ரேலுக்குள் நுழையும் என அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அசர்பைஜான், லிபியாவிற்குள் நுழைந்தது போன்று, இஸ்ரேலுக்குள்ளும் தங்களால் நுழைய முடியும், அந்த வலிமை துருக்கி படைகளுக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனால், துருக்கி, இஸ்ரேல் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் Israel Katz , சதாம் உசேனின் பாதச் சுவடுகளை, துருக்கி அதிபர் எர்டோகான் பின்பற்றுகிறார். சதாம் உசேனுக்கு என்ன நிலை ஏற்பட்டதோடு, அது எர்டோகானுக்கும் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

இதற்கு துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் பிடான் கடும் பதிலடியை கொடுத்துள்ளார். உலக மக்களின் மனசாட்சியாக துருக்கி அதிபர் எர்டோகான் பேசியுள்ளார். இனப்படுகொலைகளை நிகழ்த்தி வந்த ஹிட்லருக்கு என்ன நிலை ஏற்பட்டதோடு, அதே நிலை தான் நெதன்யாகுவிற்கும் வரப் போகிறது. நாசிப் படைகள் எப்படி தங்களது குற்றங்களுக்கு தண்டனை பெற்றார்களோ, அதே போன்ற தண்டனையை இஸ்ரேல் படைகளும் பெறுவார்கள்.

நாகரீக சமூகம் பாலஸ்தீனியர்களின் பக்கம் நிற்கிறது. எனவே அவர்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீதிக்கான குரலை ஒடுக்க நினைக்கின்றனர். துருக்கி அதிபரின் எச்சரிக்கை, சியோனிச அரசை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இனப்படுகொலைகளை நிகழ்த்திய அனைவரின் வரலாறும் இறுதியில் ஒரே போன்று தான் முடிந்துள்ளது. இவ்வாறு துருக்கி அதிபர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

காசா மீது 297வது நாளாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தாக்குதல் நடத்தி இனப்படுகொலைகளை அரங்கேற்றி வருகின்றன. உலகின் எந்த நாட்டின் தலைவராலும் இதனை இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஈரான் தலைமையிலான போராளிக்குழுக்கள் மட்டுமே இஸ்ரேலுக்கு எதிரானபோரை நடத்தி வருகின்றன. சன்னிப் பிரிவு முஸ்லீம் நாடுகள் தொடர்ந்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button