உலகம்

295வது நாளில் காசா! தொடர்ந்து சண்டையிடும் பாலஸ்தீனியர்கள்!

295வது நாளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பாலஸ்தீன் போராளிக்குழுக்கள் வீரத்துடன் எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் தங்களது தாக்குதல் விபரங்களை பட்டியலிட்டுள்ளனர்.சனிக்கிழமை அன்று காசா சிட்டியின் Tal al-Hawa பகுதியில் இஸ்ரேல் படைகளை குறுகிய தொலைவில் நேருக்கு நேர் எதிர்கொண்டு, கடும் உயிர்ச் சேதங்களை விளைவித்துள்ளதாக ஹமாசின் அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை தூக்கிச் செல்ல அங்கு வந்த ஆக்கிரமிப்பு படைகள் மீது rocket-propelled grenade ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தி, மேலும் பல உயிர்ச்சேதங்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்தியதாக ஹமாஸ் படை தெரிவித்துள்ளது.

மேலும் அப்பகுதியில் இஸ்ரேல் தரைப்படை மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த கவச வாகனம் மீது tandem RPG shell, al-Yassin ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் படை தெரிவித்துள்ளது. இதில் ஆக்கிரமிப்பு படையினர் தரப்பில் உயிர்ச்சேதம் அல்லது காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே இடத்தில் மற்றொரு பாலஸ்தீனக் குழு, mortar shells ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரர்கள் தங்கிருந்த கட்டிடம் ஒன்றின் மீது RPG ஆயுதங்கள் மூலம் ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியுள்ளது.
Street 8 பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை மெர்க்காவா டாங்கியை குறிவைத்து,al-Yassin shell ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் படை கூறியுள்ளது.

மற்றொரு பாலஸ்தீன் குழுவான அல்குத்ஸ படை வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை குறிவைத்து, 60 mm mortar shells ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.Tal al-Hawa பகுதியில் சனிக்கிழமை முழுவதும் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.வடக்கு மற்றும் தெற்கு காசாவை பிரிக்கும் Netzarim Axis பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் ராணுவத் தளத்தை குறிவைத்து, தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து ஒரே நேரத்தில் பாலஸ்தீனிய ராணுவ குழுக்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலுக்கு குறுகிய தூர 114 mm rocketகளை பயன்படுத்தியதாக அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே பகுதியை குறிவைத்து, large-caliber mortar shells ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக மற்றொரு பாலஸ்தீன் போராளிக்குழுவான அல் அக்ஸா தியாகிகள் படை தெரிவித்துள்ளது.இதே போல் பகுதியில் குழுமியிருந்த ஆக்கிரமிப்பு படைகளை குறிவைத்து, அல்கஸ்ஸாம் ராணுவம் மற்றும் அபு அலி முஸ்தபா படை உள்ளிட்ட போராளிக்குழுக்கள் mortar units, rocket artillery shells உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளன.கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் 3 மெர்க்காவா டாங்கிகளை தகர்த்ததாக ஹமாசின் அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,வெள்ளிக்கிழமை காசாசிட்டியின் Tel al-Hawa பகுதியில் இஸ்ரேலின் 2 மெர்க்காவா டாங்கிகளை கனரக Shawaz வெடிகுண்டுகள் மூலம் தகர்த்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியபோது, அதன் அருகே ஆக்கிரமிப்பு வீரர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே பகுதியில் மற்றொரு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மெர்க்காவா டாங்கியை al-Yassin 105 ஆயுதம் மூலம் தகர்த்ததாக அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும் அதே பகுதியில் ஹமாசின் குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர் மூலம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் தரைப்படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், பலத்த உயிர்ச்சேதம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button