4 பேருக்கு எதுக்கு AC! இந்தியன் 2 ஓடிக் கொண்டிருந்த போது, AC யைஆஃப் செய்த தியேட்டர் நிர்வாகம்!

இந்தியன் 2 ஓடிக் கொண்டிருந்த போது, திடீரென AC யை ஆஃப் செய்த தியேட்டர்…
குறைவான கூட்டம் இருப்பதால், ஏசி போட முடியாது என நிர்வாகம் விளக்கம்…
கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்த, 4 பார்வையாளர்கள்… ஊழல் ஒழிப்பு தாத்தாவுக்கு வந்த சோதனை…
தமிழ் சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் கொடி கட்டிப் பறப்பவர் உலக நாயகன் கமல் ஹாசன்.
தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரோடு பந்தாவாக வலம் வந்தவர் சங்கர். இவர்கள் இருவருக்கும் இது ஒரு சோதனையான காலக்கட்டம்.
90களில் பெரு வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் 2ஆம் பாகம் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள தியேட்டரில் நடந்த சம்பவம், படக்குழுவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொற்பமான பார்வையாளர்களே இருந்ததால், தியேட்டர் நிர்வாகம், திடீரென ஏசியை அணைத்துள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த ரசிகர்கள் , இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தியேட்டர் நிர்வாகம் மற்றும் பார்வையாளர்கள் இடையே நடந்த மோதலாக இருந்தாலும், நேரடியாக படக்குழுவின் பெயரையும் சேர்த்து கெடுத்துள்ளது.
இந்தியன் 2 திரைப்படம் 250 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. இந்திய அளவில் இன்று வரை 80 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 51 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலக அளவில் ஒட்டுமொத்தமாக 144 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. எப்படி கணக்கு பார்த்தாலும் 100 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அதே நேரம் 3ஆம் பாகமும், 2ஆம் பாகத்துடன் சேர்த்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எனவே 3ஆம் பாகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், தற்போதைய நட்டத்தை சரிகட்டும் என நம்பப்படுகிறது.