நெதன்யாகுவின் உரையை கேட்கச் சென்ற எலான் மஸ்க்! கடும் விமர்சனம்!

நெதன்யாகுவின் பேச்சை கேட்கச் சென்ற எலான் மஸ்க்…
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளுடன் அருகே அமர்ந்து விசுவாசம்…
25 ஆயிரம் குழந்தைகள் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்து, சர்வதேச நீதிமன்றத்தால், போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நெதன்யாகுவின் பேச்சை கேட்பதற்காக, அமெரிக்க நாடாளுமன்றம் சென்றார் டெஸ்லா சிஇஓ மற்றும் டுவிட்டரின் உரிமையாளரான எலான் மஸ்க்.
அவரது இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது டெஸ்லா தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும், எக்ஸ் தளத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நெதன்யாகு வந்த போது, எழுந்து நின்று கைதட்டி வரவேற்கும் இந்த நபர், டுவிட்டரில் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட அனுமதிப்பார் என நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என டுவிட்டர்வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இஸ்ரேலின் செயல்பாடுகளை அமெரிக்க பணக்கார வர்க்கம் ஒரு பக்கம் ஆதரித்தாலும், மற்றொரு பக்கம் கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. சுமார் 70 எம்.எம்.பிக்கள் நெதன்யாகுவின் உரையை புறக்கணித்துள்ளனர்.
இந்தச் சூழலில் நெதன்யாகுவின் பேச்சை கேட்பதற்காக சிறப்பு அழைப்பாளராக எலான் மஸ்க் அழைக்கப்பட்டிருந்தார்.
நெதன்யாகுவிற்காக ஒதுக்கப்பட்ட, தனி பார்வையாளர் மாடத்தில் எலான் மஸ்கிற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு நெதன்யாகுவின் மனைவி, மற்றும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் ராணுவ உயர் அதிகாரிகள் அருகே எலான் மஸ்க் அமர்ந்திருந்தார்.
முன்னதாக கடந்த புதன் கிழமை, காசாவின் ரபாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக மருத்துவமனையில், தனது ஸ்டார்லிங் சேட்டிலைட் இணையதளம் மூலம் உதவிகள் வழங்கப்படுவதாக எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தன்னை பொது நபராக காட்டிக்கொள்ள அவர் முயற்சி செய்தார்.
எலான் மஸ்க், டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
====