உலகம்

அனைவரும் எழுந்த போது, கெத்தாக அமர்ந்திருந்த பெண் எம்.பி.! நெதன்யாகுவிற்கு எதிர்ப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவிற்கு நேருக்கு நேர் எதிர்ப்பு..
அனைவரும் எழுந்து நின்றபோது, அமர்ந்திருந்து கண்டனம்…
நீ ஒரு போர்க்குற்றவாளி என்ற பதாகையை காட்டிய சம்பவம்…

காசாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிராயுதபாணிகளை கொன்று குவித்து, உலக கிரிமினல் நீதிமன்றத்தால், சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இவரை அமெரிக்காவின் நாடாளுமன்றத்திற்கு அழைத்து, இரு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், கூட்டு கூட்டத்தில் பேச அனுமதித்தது மூலம் ஜனநாயகம், மனிதநேயத்தை குழிதோன்றி புதைத்தனர்.

முன்னதாக நெதன்யாகு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போதும், அவர் பேசிக் கொண்டிருந்த போதும், standing ovation. எனப்படும் எழுந்து நின்று வரவேற்று, மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தனர்.

இதனிடையே அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்று நெதன்யாகுவை வரவேற்ற போது, ஆளும் ஜனநாயக கட்சியின் எம்.பியான ரஷீதா தாலிப் அமர்ந்திருந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதே போல் நெதன்யாகு பேசிக் கொண்டிருந்த போது, போர்க் குற்றவாளி, இனப்படுகொலை குற்றவாளி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காட்டி எதிர்ப்பை பதிவு செய்தார்.

நெதன்யாகுவின் கூட்டு உரையை ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசும் புறக்கணித்திருந்தார்.
இதே போல் ஆளும் கட்சியின் 70 எம்.பி.க்கள் நெதன்யாகுவின் உரையை புறக்கணித்தனர்.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button