“இறைவா காசா குழந்தைகளை காப்பாற்று” அமெரிக்க மருத்துவரின் ஒப்புதல் வாக்குமூலம்!

காசா சிறுமிக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவரின் ஒப்புதல் வாக்குமூலம்….
இதயத்தை நொறுக்கும் தகவல்கள்…. வாய்மூடி கிடக்கும் உலகம்…
உலகத்திலேயே குழந்தைகளுக்கு ஆபத்தான பகுதி காசா என ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்தற்கு பிறகு எவ்வளவு உண்மைகள் புதைந்து கிடக்கின்றன என்பதை அண்மை நிகழ்வுகள் காட்டி வருகின்றன. அந்த வகையில் காசாவில் தன்னார்வலராக பணியாற்றிய அமெரிக்க மருத்துவர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ள உண்மைகள், நாகரீக சமூகத்தை தலைகுனிவில் ஆழ்த்தியுள்ளன.
மார்க் பெர்ல்முட்டர் ஒரு எலும்பியல் மற்றும் கை அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார், அவர் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் ராக்கி மவுண்டில் வேலை செய்பவர். மற்றொரு மருத்துவர் ஃபெரோஸ் சித்வா வடக்கு கலிபோர்னியாவில் வேலை செய்த இவர் அதிர்ச்சி மற்றும் தீவிர பராமரிப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.
இவர்கள் இருவரும் ஒருவாரம் காசாவில் தங்கி சேவை செய்துள்ளனர். அவர்கள் பொலிட்டிகோ என்ற ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரை கண்ணீரை வரவலைக்கிறது. அவர்கள் கூறியுள்ளதை பார்க்கலாம். அமெரிக்காவில் ஒருவரது சம்மதம் இல்லாமல் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது.
ஆனால் காசா ஐரோப்பிய மருத்துவமனையில் septic shockஆல் பாதிக்கப்பட்ட, உடலில் உயிர் மட்டுமே இருந்த 9 வயது சிறுமி ஜுரிக்கு அவரது சம்மதம் இல்லாமல் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. அவர் அங்கேயே இறந்துவிடுவார் என நாங்கள் நினைக்கவில்லை.
அவளது வலதுகால் எழும்பு முறிவு காரணமாக உலோக ஊசிகள் மற்றும் கம்பிகள் மூலம் சாரமாக கட்டப்பட்டிருந்தன. அவளது முகம் வெடி மருந்து தீக்காயத்தால், கருப்பாய் கண்டிப் போய் இருந்தது. கைகள் ஆங்காங்கே துண்டு துண்டாக சிதைக்கப்பட்டு, ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தன.
வலியால் அவள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தாள். இதனால் வேறு வழியில்லாமல் அவளுக்கு மயக்கு மருந்து செலுத்தினோம். அறுவை சிகிச்சை அறையில், அவளது தலை முதல் கால் வரை முழுமையாக பரிசோதனை மேற்கொண்டோம். அவளது இடது தொடைப்பகுதியின் பின்புறம், 2 இஞ்சுக்கு எழும்புகள் இல்லை. மேலும் அப்பகுதியில் சதை மற்றும் தோல் சிதைந்து, காணாமல் போய் இருந்தது.
அவளது பிட்டங்கள் கிழிக்கப்பட்டு, இடுப்பு கீழ் எழும்பு வெளியே தெரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒன்றை கவனித்தோம். எங்களது அறுவை சிகிச்சை படுக்கை மீது, அவள் உடலில் இருந்து, லார்வா புளுக்கள் கொட்டின. மருத்துவர் ஃபெரோஸ் கடவுளே இந்த சிறுமியை காப்பாற்று என பிரார்த்தனை செய்தார். அவள் அங்கேயே இறந்து விட்டாள் என தெரிவித்துள்ளார்.
இது காசாவில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தான். கொல்லப்பட்ட சுமார் 40 ஆயிரம் பேரில் கணிசமானவர்கள் குழந்தைகள் தான். புதன்கிழமை கான் யூனிசில் ஒரு குழந்தையை இஸ்ரேலிய ஸ்னைப்பர் குறி பார்த்து சுட்டுக் கொன்றுள்ளார். இதுவும் விபத்தாக நடந்த ஒன்றல்ல. குழந்தைகளை குறிவைத்து இனப்படுகொலை நடைபெறுவது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
கான்யூனிசில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடைபெற்ற தாக்குதலில், ஒரு நாளில் மட்டும் 24 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு Summary child executions அதாவது குழந்தைகளுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை என்கிறார், காசாவில் பணியாற்றிய அமெரிக்க ஜோர்டானிய மருத்துவர் Dr Tanya Haj-Hassan. அவர் காசாவில் குழந்தைகள் இஸ்ரேல் ராணுவத்தால், நன்கு திட்டமிடப்பட்டு கொல்லபடுகிறார்கள் என்கிறார்.
இதனை அவர் மட்டும் கூறவில்லை. யூத அமெரிக்க மருத்துவர் மார்க் பெர்ல்மட்டர் கூறிய வார்த்தைகளையும் சேர்த்து குறிப்பிடுகிறார். அதாவது உலகின் தலைசிறந்த ஸ்னைப்பர்கள் என்ற சான்றிதழ் பெற்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை ஸ்னைப்பர்கள் தான் காசாவில் குழந்தைகளை கொல்கின்றனர்.
பல குழந்தைகளின் உடலில், இருந்து 2 குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது, இரண்டு முறை ஒரு குழந்தையை சுட்டிருக்கின்றனர். இதன்மூலம் அவர்கள் தற்செயலாக குழந்தைகளை கொல்லவில்லை என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
யூத அமெரிக்க மருத்துவர் மார்க் பெர்ல்மட்டர் இதனை அமெரிக்காவின் சிபிஎஸ் ஊடகத்துக்கு நேர்காணல் வாயிலாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.