292 நாட்கள் தொடர் போர்! வீழாத பாலஸ்தீனியர்கள்! உலகமே கைவிட்ட நிலையிலும் உறுதி!

அதிநவீன இஸ்ரேல் ராணுவத்தை 10 மாதங்களாக எதிர்கொள்ளும் காசா போராளிக்குழுக்கள்…
292வது நாளிலும் இஸ்ரேல் படைக்கு சேதம் விளைவித்ததாக அறிவிப்பு…
உலகின் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், குவியல் குவியலாக ஆயுதங்கள், அளவுகடந்த பொருளாதாரம் என மிதமிஞ்சிய வசதிகளை பெற்ற இஸ்ரேல்படை, உணவுக்கே போராடும், காசா போராளிகளை 10 மாதங்கள் ஆகியும் வீழ்த்த முடியாமல் போராடி வருவது பெரும் ஆச்சர்யங்களை ஏற்படுத்தியுள்ளது.
பிரத்யேக குண்டு துளைக்காத ராணுவ உடைகள், ஹெல்மெட், ஷு, அதி நவீன துப்பாக்கிகள், டாங்கிகள், போர் விமானங்களுடன் வலம் வரும் இஸ்ரேல் படையை, காலணி கூட அணியாத காசா குழுவினர் தொடர்ந்து எதிர்கொண்டு தாக்கும் வீடியோக்களை பலரும் பார்த்திருப்போம்.
இந்த நிலையில், 292வது நாளாக இஸ்ரேல் படைகளை தொடர்ந்து எதிர்த்து போரிட்டு கடும் சேதங்களை விளைவித்தாக பாலஸ்தீன் குழுக்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு, தெற்கு, மத்திய காசா பகுதிகளில், இஸ்ரேல் படைகளை எதிர்த்து தொடர்ந்து பாலஸ்தீன போராளிக்குழுக்கள் தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற சில தாக்குதல் விபரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். கான்யூனிசில் இஸ்ரேல் ராணுவ D9 bulldozer மீது al-Yassin RPG ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹமாசின் அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது.
மத்திய காசா பகுதியில் ஆக்கிரமிப்பு படை மீது mortar shells தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Netzarim Axis எனப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மீது caliber mortar shells தாக்குதல் நடத்தியதாக அல்குத்ஸ் படை அறிவித்துள்ளது. பிற போராளிக்குழுக்களுடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் ஒரு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை அதிகாரி படுகாயம் அடைந்துள்ளதாக, மற்றொரு சம்பவத்தில் ஒரு இஸ்ரேல் அதிகாரி உயிரிழந்ததாக, ஆக்கிரமிப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் பெரும்பாலும் பொதுமக்களை கொலை செய்வதையும், கட்டுமானங்களை அழிப்பதிலும் தான் குறியாய் உள்ளது. போராளிக்குழுக்களின் வலிமையை ஒடுக்கியதாக தெரியவில்லை. இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், ஆயுதங்கள் தயாரிக்கவும், இறக்குமதி செய்யவும் முழு வசதியை பெற்றுள்ளது.
ஆனால் பாலஸ்தீனம் தனி நாடாக இல்லாத நிலையில், உள்நாட்டில் கிடைக்கும் குறைந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றனர். இது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். ஆனாலும் நம்பிக்கையுடன் காசா போராளிக்குழுக்கள் ஆக்கிரமிப்பை எதிர்ப்பது, உலகின் 8 வது அதிசயம் என்றால் அது மிகையல்ல.
===