சினிமா

போயஸ் கார்டனில் வீடு வாங்கியது பற்றிய தனுஷின் பேச்சால் சர்ச்சை!

எளிய பின்னணியில் இருந்து, உழைத்து முன்னேறியவர் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி…
150 கோடிக்கு வீடு வாங்கி விட்டு, ருட்ராட்சம் அணிந்து எளியவர் போல் காட்டிக் கொள்வதாக விமர்சனம்…
ஜெயலலிதா, ரஜினிகாந்த் இல்லம் அருகே புதிய வீடு வாங்கியது பற்றிய தனுஷின் பேச்சால் சர்ச்சை…

ராயன் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், 16 வயதில், ரஜினிகாந்தின் வீட்டை பார்க்க வேண்டும் என்பதற்காக சைக்கிளில், போயஸ் கார்டன் சென்றதாகவும், அங்கு ரஜினிகாந்த் மற்றும் ஜெயலலிதா அவர்களின் வீட்டை பார்க்கும் போதும், அங்கிருக்கும் போலீசார், ரசிகர்கள், அரசியல்வாதிகளின் கூட்டத்தை பார்த்து, அந்த இடத்தில் தானும் ஒரு வீடு வாங்க வேண்டும் என நினைத்ததாகவும், அதற்காக உழைத்து, தற்போது அந்த கனவை சாத்தியமாக்கியதாக தெரிவித்தார்.

அவரது இந்தச் பேச்சை பார்வையாளர்கள் பலரும் வரவேற்று கரகோசம் எழுப்பினர். ஆனால் இந்தப் பேச்சு சமூக வலைதளத்தில் அவருக்கு உரிய ஆதரவை பெற்றுத் தரவில்லை. பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

நம் நாட்டில் சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கே வருடக் கணக்கில் உழைக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு பெரிய இயக்குநரின் மகனாக இருந்து, சினிமாவில் முன்னேறிவிட்டு, தற்போது, எளிய மனிதரை போல் தனுஷ் வேடமிடுகிறார் என விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக ஜெயலலிதா, ரஜினி காந்துக்கு இணையானவராக தன்னை காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் என்றும் அவர்கள் இருவரும் சாதாரண நிலையில், இருந்து கஷ்டப்பட்டு, பெரிய உயரத்தை அடைந்தனர் ஆனால் தனுஷ் அப்படியல்ல என சமூக வலைதள வாசிகள் சாடியுள்ளனர்.

16 வயதில் தனுஷ் அங்கு சைக்கிளில் சென்றதாக கூறுகிறார், ஆனால் 18 வயதில் அவர் நடித்த துள்ளுவதோ இளமை படம் வெளியானது. இதற்கு அவரது தந்தை நிதி அளித்தார். அவரது சகோதரர் இயக்கினார். 19 வயதிலேயே பெரிய நட்சத்திரமாக உருவெடுத்து விட்டார். 20 வயதில் ரஜினி மகளை திருமணம் செய்தார்.

அடுத்தடுத்து சில ஆண்டுகளில் நிறைய படங்கள் வெளியாகி, பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். இதில் எங்காவது, சாதாரண ஏழை, எளிய இளைஞர்கள் படும் கஷ்டத்தை தனுஷ் அனுபவித்திருக்கிராறா என சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளார்.
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, 90களிலேயே 15க்கும் மேற்பட்ட பல வெற்றிப் படங்களை எடுத்து, முன்னணி இயக்குநராக இருந்தார்.

கடைசியாக அவர் எடுத்த படங்கள் மட்டுமே தோல்வியை தழுவின. தனுஷின் சகோதரர் செல்வ ராகவனும் தனுஷ் உடன் சேர்ந்தே, வளர்ந்த இயக்குநராக உருவெடுத்துவிட்டார். தந்தை மற்றும் சகோதரரின் ஆதரவுடன், ரஜினிகாந்தின் மருமகன் என்ற பெயருடன் முழுக்க முழுக்க Nepo kid அதாவது வாரிசு நடிகராக இருந்து கொண்டு, எளிய இளைஞரை போல் தன்னை பாவித்துக் கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

ருட்ராட்சம் அணிந்து சாதாரண உடை அணிந்து கொண்டு, தன்னை சன்னியாசி போல, காட்டி கொண்டு, மறு புறம் 150 கோடிக்கு சொகுசு வீடு வாங்கியுள்ளதன் மூலம் வேடமிடுகிறார் தனுஷ் என கூறியுள்ளனர். அண்மையில் தனுஷ் போயஸ் கார்டனில் 150 கோடிக்கு வீடு வாங்கியதும், அவரது ராயன் படம் வரும் 26 ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button