POCO மொபைல் வெடித்து விபத்து – ஒருவர் பலி, ஒருவர் காயம்!
இந்த நிறுவன மொபைல் போன் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே போல் வெடித்துள்ளது

ராமநாதபுரம் பரமக்குடியில் மொபைல் போன் வெடித்துச் சிதறியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து பலியாகியுள்ளனர். பின்னால் அமர்ந்து சென்றவர் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியில் காவலாளியாக வேலை பார்க்கும் ரஜினி என்ற இளைஞர், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, மொபைல் பேட்டரி வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலியாகியுள்ளார்.
POCO என்ற கம்பெனி மொபைல் போன் தான் வெடித்துச் சிதறி இருப்பதாக தெரியவந்துள்ளது. MADE IN INDIA என்று குறிப்பிடப்பட்டு, இந்த மொபைல் போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிறுவன மொபைல் போன் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு இதே போல் பேட்டரி வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி இந்தியா டுடே ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
ஒரு வாடிக்கையாளர் POCO M3 மொபைல் பேட்டரி வெடித்துச் சிதறியதாக டுவிட்டர் தளத்தில் படத்தை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக டுவிட்டரில் பதில் அளித்த POCO நிறுவனம் இதுகுறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தது.