உலகம்

இஸ்ரேலின் செயல் ஆபத்தான விளையாட்டு! எதிர்பாரா தாக்குதல் நடக்கும் என ஈரான் எச்சரிக்கை!

ஏமன் மீதான தாக்குதல் விபரீத விளையாட்டு…
மாபெரும் போர் வெடிக்கும் என இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை…

ஏமன் நகரம் மீது தாக்குதல் நடத்தி உள்ள இஸ்ரேலின் செயல், விபரீத விளையாட்டு என, ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நாசர் கன்னானி,
ஏமன் மீதான தாக்குதலுக்கு, எதிர்பார்க்காத, யூகிக்காத, அபாயமான பின் விளைவுகளை இஸ்ரேலும், அதன் ஆதரவாளரான அமெரிக்காவும் சந்திக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு சிரியா வெளியுறவுத்துறை அமைச்சகமும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இஸ்ரேல் கடந்த 9 மாத போரின் மூலம் ஒரு மோசமான நிலைக்கு வந்திருப்பதை இந்தத் தாக்குதல் காட்டுவதாகவும், சகோதரத்துவ நாடான ஏமனுக்கு சிரியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button