ஏமன் உடனான மோதல் எதிரொலி – இஸ்ரேல் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

ஏமன் – இஸ்ரேல் மோதல் எதிரொலி…
டெல் அவிவ் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு…
டெல் அவிவ் நகரம் மீது ஏமன் படைகள் ஆள் இல்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தின. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஏமன் நகரமான ஹோதைதா மீது, 25 போர் விமானங்கள் மூலம் அமெரிக்க குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், 87 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அரபு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏமன் படைகள் இஸ்ரேலுக்கு எதிராக ஆக்ரோஷ நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரோலியாக டெல் அவிவ் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளன. 5 பிரதான வங்கிகளின் பங்குகள் 1.3 சதவீதம் சரிந்துள்ளன. கட்டுமானத்துறை சம்பந்தமான பங்குகள் 1.6 சதவீதமும், பயோ மெடிக்கல் துறை தொடர்புடைய பங்குகள் 2 சதவீதம் வரையிலும் குறைந்துள்ளன.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மூலம் ஏமன் படைகள் அதிகமான ஆயுதக் குவிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் ஈரானிடம் இருந்து மேலும் நவீன ஆயுதங்களை பெறுவார்கள் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தகவல் கணித்துள்ளது.
====