உலகம்

காசாவுடன் நிற்போம் – விளைவுகள் பற்றி கவலை இல்லை! ஏமன் படைகள் திட்டவட்ட அறிவிப்பு!

காசாவுடன் நிற்போம்….
விளைவுகள் பற்றி கவலை இல்லை…
ஏமன் படைகள் திட்டவட்ட அறிவிப்பு…

இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன ஏமன் ஹவுத்திப் படைகள். இந்த நிலையில், அண்மையில் டெல் அவிவ் நகரத்தின் மீது, ஆள் இல்லா விமானம் மூலம் ஹவுத்திக்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 10 பேர் காயம் அடைந்தனர்.

இதற்கு பதிலடியாக ஏமனின் ஹோதைதா துறைமுக நகரம் மீது 25 போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் 3 பேர் பலியான நிலையில், 87 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஏமன் ஆயுத படைகளின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரி, தங்களுக்கு எத்தகைய இழப்புகள் ஏற்பட்டாலும், காசா மக்களின் பக்கம் உறுதியாக நிற்போம் என தெரிவித்துள்ளார்.

டெல் அவிவ் நகரை ஒரு பாதுகாப்பற்ற நகரமாக தங்கள் படை மாற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இனி வரும் நாட்களில், ஈரான் தலைமையிலான கூட்டணி படைகளுடன் ஒருங்கிணைந்து, துல்லியமான, பலமான தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

இதனிடையே ஏமன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களில், இஸ்ரேலின் ஈழட் நகரத்தை நோக்கி, பல மிசல்ஸ்களை ஏவி ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த தாக்குதலின் நோக்கம் நிறைவேறியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போல் அமெரிக்க கப்பல் ஒன்றை தாக்கியுள்ளதாகவும் ஏமன் படைகள் அறிவித்துள்ளன.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button