“அதிர்ச்சியில் உள்ளோம்” இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் அச்சம்! 150 மீட்டரில் தாக்கிய ஹவுத்திக்கள்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு, 150 மீட்டர் தொலைவில் விழுந்த குண்டுகள்…
ஏமன் ஹவுத்திக்களின் தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்ததாக அமெரிக்க தூதர் அச்சம்…
சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து, ஏமன் ஹவுத்திப் படைகள் நடத்தியுள்ள ஆள் இல்லாத விமானத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள இஸ்ரேலுக்காக அமெரிக்க தூதர் ஜாக் லெவ், இந்த தாக்குதலால் கடும் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஐயன் டோம் உள்ளிட்ட பலவகையான பாதுகாப்பு அமைப்புகளை வைத்திருக்கும் நிலையில், எப்படி, அதன் ஆள் இல்லா விமானம் 3000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, இலக்கை துல்லியமாக தாக்கியது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சரியாக அமெரிக்க தூதரகத்திற்கு 150 மீட்டரில், ஆள் இல்லா விமானம், குண்டுகளை வீசியுள்ளது. இது அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்டதா, அல்லது இலக்கு மாறியுள்ளதா போன்ற விளக்கங்களை ஏமன் படைகள் வழங்கவில்லை.
===