இஸ்ரேலுக்கு எதிராக திரும்பும் பிரிட்டன்! பாலஸ்தீனியர்களுக்கு ரூ.225 கோடி நிதி!

UNRWA எனப்படும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு ஹமாசுக்கு ஆதரவாக செயல்படுவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதனையடுத்து, அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் நிறுத்தி வைத்தன.
மேலும் அந்த அமைப்பின் பள்ளிகள், மருத்துவமனைகள், ஹமாசின் அலுவலகங்களாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, அவற்றை குண்டு வீசி அழித்து வருகிறது இஸ்ரேல். இதனால், அந்த அமைப்பின் மூலம் உணவுப் பொருட்கள், கல்வி, மருத்துவம் பெற்று வந்த காசா மக்கள் தற்போது, நிற்கதியாக நின்று வருகின்றனர்.
அதே நேரம் அந்த அமைப்புக்கு உரிய நிதியை வழங்க வேண்டும் என பாலஸ்தீனியர்களும், அரபு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், புதிததாக பிரிட்டனில் ஆட்சியை பிடித்துள்ள தொழிலாளர் கட்சி, ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் (David Lammy) டேபில் லம்மி ஐ.நா. அகதிகள் அமைப்பு நடுநிலையோடு செயல்படுவதாக உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அந்த அமைப்புக்கு பிரிட்டன் சார்பில் 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு பாலஸ்தீனியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
===