இஸ்ரேல் படையினர் 9254 பேர் பலி, காயம்! 3000 பேர் ஊனம்! ஹிஸ்புல்லா புதிய தகவல்!

காசா போரில் இஸ்ரேல் படையினர் 9254 பேர் பலி அல்லது காயம்…
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா வெளியிட்ட தகவல்…
இஸ்ரேல் தங்கள் தரப்பு இழப்பு விபரங்களை திட்டமிட்டு குறைத்து காட்டிவருவதாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் தரப்பு இழப்பு விபரங்கள் அண்மையில் வெளியாகி இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர்கள் தரப்பில் தாக்குதலில் 9254 படையினர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இவர்களில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் எஞ்சியவர்கள் படுகாயத்துடன் உயிர் பிழைத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் காசா மற்றும் லெபனான் எல்லையில் தங்கள் தரப்பில் சுமார் 600 பேர் வரை மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதேப் போல், தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் படையினர் 3000 பேரின் கை, அல்லது கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 650 பேருக்கு கை கால் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 185 பேருக்கு நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே பிரபல சர்வதேச ஊடகமான தி கிரடில் நடத்திய கள ஆய்வில், இஸ்ரேல் எவ்வாறு இழப்புகளை மறைத்து வருகிறது என்பதை விளக்கியுள்ளது.
லெபனான், எகிப்து, காசா எல்லைகளில் இஸ்ரேலால் ட்ரூஸ், பெடூன் அரபு பழங்குடிகள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், இவர்களை உள்ளடக்கிய ராணுவ பிரிவுகள் தான் அங்கு பாதுகாப்பு பணியில் இருப்பதாகவும் கூறியுள்ளது. இவர்கள் யூதர் அல்லாத, மாற்று மத நம்பிக்கைகள் கொண்ட அரபியர்கள் ஆவர்.
எல்லைப்புற ராணுவத்தில் இவர்கள் அதிகாரிகளாகவும், வீரர்களாகவும் உள்ளனர். இந்தப் போரில் இவர்கள் கொல்லப்பட்டால், அவர்களின் உடலுக்கு இஸ்ரேல் ராணுவ மரியாதை அளிப்பதில்லை. மேலும் அவர்களது உயிரிழப்புகளை வெளியிடுவதில்லை. இதற்காக பெரும் தொகையை அவர்களின் குடும்பத்திற்கு கொடுக்கிறது.
இதுமட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த கூலிப் படைகளையும் இஸ்ரேல் ராணுவ பணிக்கு பயன்படுத்தி வருகிறது. அவர்களது மரணங்களையும் கணக்கில் காட்டாமல் மறைத்து வருகிறது என அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
உண்மையில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரில் மட்டும் 260க்கும் மேற்பட்ட வீரர்களை ஆரம்ப மாதங்களில் மட்டும் இஸ்ரேல் இழந்ததாக அந்த பத்திரிக்கை கூறுகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பு தங்கள் தரப்பில் ஒருவர் உயிரிழந்தால், இஸ்ரேல் தரப்பில் அதே பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் துல்லிய தாக்குதல்களை நடத்துவதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
====