இந்தியா

அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? நடிகை டாப்சி விளக்கம்!

ஆனந்த் அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு செல்லாத நடிகை டாப்சி…
அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது என விளக்கம்…

5 மாதங்களாக நீடித்து வந்து ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன. இவர்களது திருமணத்தில் உலகப் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்ட நிலையில், சில முக்கிய நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளவில்லை. அதில் குறிப்பிடத்தக்கவர் பிரபல பாலிவுட் நடிகை டாப்சி.

இதுகுறித்து அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிரபல திருமணம் குறித்து பேசிய டாப்சி, திருமணம் என்பது, தனிப்பட்ட குடும்பங்கள் சார்ந்தது. உறவினர்கள், நண்பர்கள் அழைக்கப்படுவார்கள். எனவே தனிப்பட்ட முறையில் அறிமுகம் இல்லாதவர்களின் திருமணத்திற்கு நான் செல்ல மாட்டேன்.

அறிமுகம் உள்ளவர்களின் திருமணத்திற்கு மட்டுமே செல்வேன். எனக் கூறியுள்ளார். பிரபல நடிகையான டாப்சி தனது திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தினார். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தார். அவரது திருமண புகைப்படங்களைக் கூட அவர் வெளியிடவில்லை. சில புகைப்படங்கள் அதையும் மீறி கசிந்தன.

தனது கருத்துக்களை எப்போதும் துணிச்சலாக சொல்பவர் டாப்சி. பணத்திற்காக கூட்டத்தில் கோவிந்தா போட மாட்டார். டெல்லியில் போராடிய விவசாயிகளுக்காக துணிச்சலாக குரல் கொடுத்தவர்.

அவர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றபோது, கூட, அவர் அரசை விமர்சித்ததற்கு தண்டனை என புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், அவர் அம்பானி வீட்டுத் திருமணத்தை புறக்கணித்திருப்பதும் பேசு பொருளாக மாறியுள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button