உலகம்

ஏமனில் அமெரிக்க – இஸ்ரேல் உளவாளிகள்! ஹவுத்திப் படைகளிடம் சிக்கினர்!

ஏமனில் கடந்த 9 வருடங்களாக செயல்பட்டு வந்த அமெரிக்க, இஸ்ரேல் உளவு நெட்ஒர்க்…
ஒட்டுமொத்தமாக தட்டித் தூக்கிய ஏமன் ஹவுத்தி அதிகாரிகள்…

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் செயல்பட்டு வந்த, அமெரிக்க, இஸ்ரேல் உளவுப் பிரிவுகளை கண்டறிந்து, அதில் வேலை செய்தவர்களை கைது செய்துள்ளதாக ஏமன் ஹவுத்திப் படைகள் அறிவித்துள்ளன.
இவர்கள் ஏமனில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறியும், பெண் உரிமை அமைப்புகள் என்ற பெயரிலும் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை குறிவைத்து, அவர்களிடம் அமெரிக்க கலாச்சாரத்தை புகுத்துவதுடன், அவர்களுக்கு பணம் கொடுத்து, ஏமன் ராணுவ ரகசியங்களை அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் அனுப்பி வைப்பதை வேலையாக வைத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடையவர்களை கைது செய்து, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெற்று, அதனை ஏமன் படை வெளியிட்டுள்ளது.

ஏமன் நாட்டு கலாச்சாரம் மற்றும் நிர்வாகத்தின் மீது தாக்குதல் நடத்துவதோடு, அங்குள்ள மத, இன சிறுபான்மையினரை அரசுக்கு எதிராக தூண்டிவிடுவது, குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை அமெரிக்க, இஸ்ரேல் உளவாளிகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் படைகளுக்கு எதிராக ஏமன் ஹவுத்திப்படைகள் கடும் தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், தற்போது, உளவு நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, இஸ்ரேலுக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button