உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் 466 லெபனானியர்கள் பலி!

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, லெபனான் எல்லையில், இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயும் போர் மூண்டது.

ஹிஸ்புல்லா நாள்தோறும் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி வருகிறது. இதற்கு இஸ்ரேல் பல மடங்கு வரம்பு மீறிய பதிலடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் தங்கள் நாட்டினர் 466 பேர் பலியாகியுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், “இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 1904 லெபனானியர்கள் காயம் அடைந்துள்ளனர், காயம் அடைந்தவர்களில் 86 சதவீதம் பேர் ஆண்கள். இதில் பெரும்பாலானவர்கள் 25 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள்.

16 சதவீதம் பேர் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் காயம் அடைந்தவர்கள் “ என லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button