விரைவில் போர் நிறுத்தம் தேவை, ராணுவம் நீண்ட கால போரை தாக்குபிடிக்காது – எதிர்கட்சித் தலைவர்!

உடனடியாக காசாவில் போர்நிறுத்தம் தேவை…
ராணுவத்தால் நீண்ட கால போரை தாக்குபிடிக்க முடியாது…
இஸ்ரேல் எதிர்கட்சிகள் திட்டவட்ட அறிவிப்பு…
ஹமாசுடன் விரைவில் நிரந்தர போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என இஸ்ரேலின் பிரதான எதிர்கட்சித் தலைவர் யாயிர் லாபித் தெரிவித்துள்ளார். பல எதிர்கட்சிகளும், பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் கேபினட்டில் இடம்பெற்றுள்ள பல இஸ்ரேலியர்களும் இதனையே தெரிவித்து வருகின்றனர்.
ஹமாசுடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றி, கைதிகளை விரைந்து மீட்க வேண்டும் என யாயிர் லாபித் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்ரேல் ராணுவ ரேடியே வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேல் ராணுவம் என்பது, ரிசர்வ் படையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட கால போர், இஸ்ரேல் ராணுவத்துக்கு உகந்தது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதே கருத்தை இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் யகுட் ஓல்மர்டும் குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகு அரசாங்கம் தூக்கி எரியப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். உடனடியாக காசாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்த அவர், ஹமாஸ் 9 மாதங்களை தாக்குப்பிடித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எந்த விதமான தொலைநோக்கு பார்வையும் அற்ற அரசாக நெதன்யாகு அரசு இருப்பதாகவும், குழப்ப நிலையில் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஹிஸ்புல்லாவின் தாக்குதலால் வடக்கு பகுதியில் இருந்து ஏராளமான யூதர்கள் வெளியேறி கடும் அவதி அடைந்து வருவதாக குற்றம்சாட்டினார்.
====