உலகம்

கொத்து கொத்தாக மடியும் இஸ்ரேல் படைகள்! உண்மையை மறைக்கும் நெதன்யாகு!

காசா வின் அல் சுஜேயா மீது திடீர் ஆக்கிரமிப்பு தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் படை அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறது. புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை நண்பகல் வரை சுமார் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.அதே நேரம் ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன போராளிக்குழுக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளுக்கு தக்க பதிலடியை கொடுத்து வருகின்றன.கடந்த ஓரிரு நாளில் இஸ்ரேல் 2 கமாண்டர்கள் உள்ளிட்ட 3 பேரை இழந்துள்ளதுடன், சுமார் 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.

எனினும் இஸ்ரேல் தொடர்ந்து பலி எண்ணிக்கை குறைத்து காட்டி வருவதாக கூறப்படுகிறது.
எனினும் இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவலில், 75வது படைப்பிரிவைச் சேர்ந்த, கமாண்டர், கேப்டன் அலய் அலீஷா என்பவர் சுஜேயா பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவருடன் சென்ற அதே படைப்பிரிவைச் சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போல், கிவாடி படைப்பிரிவைச் சேர்ந்த பிளாடூன் கமாண்டர் கேப்டன் ராய் மில்லர் என்பவர் வடக்கு காசாவில் ஹமாஸ் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.அதே சம்பவத்தில் ரோடம் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் ஒரு படை வீரர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி இஸ்ரேலுக்குள் புகுந்து பாலஸ்தீனியர் ஒருவர் நடத்திய தாக்குதலிலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.Karmiel என்ற நகரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த பாலஸ்தீனியர் ஒருவர் அங்கிருந்த, இஸ்ரேல் படை வீரரை குறிவைத்து, கத்தியால் கடும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றி, விடுமுறைக்கு வந்திருந்த அலெக்சாண்டர் என்பவர் கொல்லப்பட்டார்.அதே இடத்தில் இருந்த மற்றொரு இஸ்ரேல் ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளார். இவர்கள் இருவரும் அப்போது ராணுவ உடையில் இருந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் இஸ்ரேல் குடியுரிமை பெற்ற அரேபியர் எனத் தெரியவந்துள்ளது. அவர் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஹமாஸ், காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் அநியாயங்களுக்கான இயல்பான எதிர்வினை என குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button