இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளபதி உயிருக்கு போராட்டம் – மேற்குகரையில் 2வது நடவடிக்கை!

மேற்குகரையில் 2வது ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட பாலஸ்தீனியர்கள்….
டாங்கியை தகர்த்ததில் ஒருவர் பலி, ராணுவ தளபதி உயிருக்கு போராட்டம்…
காசாவை தொடர்ந்து மேற்குக் கரையிலும் பாலஸ்தீனியர்கள் தங்களது விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக அண்மையில் ஜெனின் நகரத்திற்குள் நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் உயிருக்கு போராடி வருவதாக இஸ்ரேல் அறிவித்தது.
தற்போது, இரண்டாவது ராணுவ நடவடிக்கையை பாலஸ்தீன குழுக்கள் மேற்கொண்டுள்ளன. மேற்குகரையின் நூர் ஷாம் அகதிகள் முகாக்குள் நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு டாங்கி ஒன்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முதல் வகுப்பு ரிசர்வ் படையைச் சேர்ந்த டாங்கியின் ஓட்டுநர் யெகுதா கெட்டோ என்பவர் பலியானார்.
அதே நேரம் அந்த வாகனத்தில் இருந்த Duvdevan commando படையின் தளபதி படுகாயம் அடைந்தார். இது இஸ்ரேல் ராணுவத்தினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், Duvdevan commando படை என்பது வழக்கமான படைகளைப் போல் செயல்படாமல், ரகசியமாக செயல்படும் ராணுவம் ஆகும். பாலஸ்தீன போராளிக்குழுத் தலைவர்களை மாறு வேடத்தில் சென்று கொல்வது, அவர்களின் இல்லங்கள் மீது குண்டு வீசுவது போன்ற துல்லிய தாக்குதல்களை நடத்தும் பிரிவு ஆகும்.
அந்த பிரிவின் கமாண்டர் தற்போது, உயிருக்கு போராடி வருவதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இதற்கு பதிலடியாக டிரோன் மூலம் இஸ்ரேல் படை வீசிய வெடி குண்டில், அப்பாவி பாலஸ்தீன பெண் மற்றும் குழந்தை பலியாகினர். பாலஸ்தீன போராளிக்குழுக்களை ஒடுக்கிறோம் என்ற பெயரில் தொடர்ந்து, அப்பாவிகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கொன்று குவித்து வருகின்றன.
====