உலகம்

ஈரானைத் தொடர்ந்து ஏமன்! அதிவேக ஹைபர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கியுள்ள ஹவுத்திக்கள்!

மணிக்கு 16 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஹைபர் சோனிக் ஏவுகணைகள்…
உள்நாட்டில் உருவாக்கி சாதனை படைத்துள்ள ஏமன் ஹவுத்திப்படை…
அமெரிக்க கூட்டுப்படைகள் கடும் அதிர்ச்சி…

அன்பு, கருணை இவைகள்தான் உலகை ஆட்சி செய்கின்றன என நாம் நம்பினாலும் உண்மையில், ஆயுதங்கள் தான் உலகை ஆட்சி செய்கின்றன. குட்டி நாடான இஸ்ரேல் கடந்த 9 மாதங்களாக, சுமார் 40 ஆயிரம் பாலஸ்தீனியர்களை படுகொலை செய்துள்ளது. இதனை தடுக்கும் சக்தி உலகின் எந்த நாட்டிடமும் இல்லை. இதற்கு காரணம் இஸ்ரேலின் பண பலம், ஆயுத பலம், அரசியல் பலம் தான்.

A truck carries an Iranian

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் ஏமன் ஹவத்திப் படைகள், உலகின் அதி நவீன ஆயுதங்களில் ஒன்றாக ஹைபர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி, அதனை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஹைபர் சோனிக் ஏவுகணைகள் என்பவை, மணிக்கு 16ஆயிரம் கிலோ மீட்டர் வரை வேகமாக சென்று தாக்கும் திறன் கொண்டவை. அதாவது ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியவை. இந்த வகை ஏவுகணைகளை, டோம் உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியாது.

அண்மையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் ஹைபர் சோனிக் ஏவுகணை பயன்படுத்தியதாக அறிவித்தது.
இந்த நிலையில் தான் இதே போன்ற ஏவுகணைகளை உள்நாட்டில் தாங்களும் உருவாக்கியுள்ளதாக ஏமன் ஹவுத்திப் படைகள் அறிவித்துள்ளன.

இந்த வகை ஏவுகணை தடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அவசர அவசரமாக இஸ்ரேல் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ரபேல் நிறுவனம் இதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஈரான், இந்தியா உள்ளிட்ட சில ராணுவ வலிமை படைத்த நாடுகளிடம் மட்டுமே உள்ளன. அத்தகைய ஆயுதங்களை ஏமன் படைகள் எப்படி உருவாக்கினார்கள் என்பது பேசுபொருளாகியுள்ளது. ஈரானின் உதவியின்றி, இதனை அவர்கள் உருவாக்கி இருக்க முடியாது என மேற்கத்திய ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button