பாலஸ்தீன தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை கைப்பற்றிய ஹமாஸ் – அமெரிக்காவுக்கு பணிந்து செல்ல மறுப்பு – மறந்து போன வரலாறு!

2006 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஹமாஸ் போட்டியிட்ட நிலையில், அந்த அமைப்பை தோற்கடிக்க பல்வேறு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.தேர்வு முடிவுகள் வெளியானபோது, மொத்தம் இருந்த 132 இடங்களில் ஹமாஸ் 74 இடங்களை பிடித்து மாபெரும் வெற்றி பெற்றது. அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா பாலஸ்தீன பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
இது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஹமாஸ் தலைமையிலான அரசை ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அறிவித்தன.அதே நேரம் அந்த நாடுகள் ஹமாஸ் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தன. மக்மூத் அப்பாஸை போல், நீங்களும் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்தால், ஹமாஸ் மீதான தடைகள் நீக்கப்படும் என ஆசை வார்த்தை காட்டினர்.இந்த முடிவை ஹமாஸ் ஏற்றுக் கொண்டிருந்தால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பில்லியன் கணக்கிலான டாலர்,,, உதவிகளை பெற்றிருக்க முடியும். தடைகள் நீக்கப்பட்டிருக்கும். சிறையில் அடைக்கப்பட்ட அதன் தலைவர்கள் பலர் விடுதலையாகி இருப்பார்கள்.
ஆனால் இந்த இடத்தில் ஹமாஸ் எடுத்த கடினமான முடிவு சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
இஸ்ரேலை ஒரு காலத்திலும் அங்கீகரிக்க முடியாது என மீண்டும் பகிரங்கமாக அறிவித்தது ஹமாஸ். 1967 ஆம் ஆண்டு இருந்த எல்லை அடிப்படையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக உருவாக்க ஒப்புக் கொள்கிறோம் என கூறியது.