பக்தியின் பெயரால் இளம்பெண்களை சீரழித்த சாமியார் – தோலுரித்த திரைப்படம்!

பக்தியின் பெயரால் இளம் பெண்களை சீரழித்து வந்த மதகுரு…
காட்சிகளை பக்தர்கள் நேரடியாக பார்க்க கட்டணம்….
போலிச் சாமியாரின் முகத்திரையை கிழித்த திரைப்படம்…
நெட்பிளிக்சில் வெளியாகி வைரலாகி வரும் திரைப்படம் மகராஜ். விஜய் சேதுபதியின் மகாராஜாவையும், இந்த திரைப்படத்தையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. இரண்டும் வேறுவேறு. சித்தார்த் பி மல்கோத்ரா இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகுவதற்கு, மதவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட கதை என்பதாலும், இதனால் இந்து மதத்தின் எந்த பிரிவும் பாதிக்கப்படாது எனக் கூறி, குஜராத் உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்கியது. 1855 காலக்கட்டத்தில் Pushtimarga
வைணவ சமூகத்தினரின் மதகுருவாக இருந்தவர் Jadunathji Brijratanji Maharaj. இவரை பக்தர்கள் ஜேஜே என அழைத்தனர்.
இவரது பிரமாண்ட அரண்மனை மற்றும் கோவில் மும்பையில் உள்ள மோட்டி ஹவேளியில் இருந்தது. இவர் மீது பக்தர்கள் வைத்திருந்த அளவு கடந்த பக்தி மற்றும் மரியாதையை பயன்படுத்தி, உயர் பிரிவைச் சேர்ந்த இளம் பெண்களை தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்தார்.
அதுமட்டுமின்றி திருமணமான பெண்கள் மீது அவர் விருப்பம் கொண்டாலும், அவர்களது கணவர்களே அப்பெண்களை சாமியாரிடம் அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்வை அந்தப் பெண்களும் பக்தியின் பெயரால் ஏற்றுக் கொண்டனர். இதற்கு அவர் பாத பூஜை என பெயர் வைத்திருந்தார்.
இந்த பாத பூஜையில் பங்கேற்க பல இளம்பெண்களும் போட்டி போட்டனர். இவர் பெண்களை பலாத்காரம் செய்வதை, பிற ஆண்கள் நேரடியாக பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
திருமணமான பெண்களுடனும் உறவு வைத்திருந்ததால், சிபிலிஸ் எனப்படும் பால்வினை நோய்க்கு ஆளாகி, அதற்காக மருத்துவரிடம் மருந்தும் எடுத்துக் கொண்டார்.
சாமியாரின் போலி முகத்தை கண்டுபிடித்த, சமூக சீர்திருத்த வாதியான, கர்சன் முல்ஜி என்பவர், இதுகுறித்து மக்களிடம் அம்பலப்படுத்துவதற்காக சத்ய பிரகாஷ் என்ற பத்திரிக்கை தொடங்கினார்.
அந்தப் பத்திரிக்கையில் சாமியாரின் காம களியாட்டங்களை பற்றி விரிவாக எழுதினார். இதனால், கர்சன் முல்ஜி மீது, ஆங்கிலேய நீதிமன்றத்தில் சாமியார் மான நஷ்ட, அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
சாமியருக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் வராத நிலையில், ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த கர்சன் முல்ஜி, பின்னர், சாமியாரின் மருத்துவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், வழக்கில் வென்றார்.
சாமியார் வழக்கில் தோற்றதால், அவரது பக்தர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தார். இந்த வரலாற்று உண்மை தான் மகராஜ் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு, நெட்பிளீக்சில் வைரலாகி வருகிறது.
போலி சாமியராக பிரபல நடிகர் Jaideep Ahlawat மற்றும் சமூக சீர்திருத்தவாதி கர்சன் முல்ஜியாக நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மதத்தின் பெயராலும், பக்தியின் பெயராலும் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதனை அம்பலப்படுத்தும் குரல்களும் இன்னும் ஒலிக்கவே செய்கின்றன என்பதை இந்த திரைப்படம் உணர்த்தியுள்ளதாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
====