சக நடிகருக்கு ஒரு பைசா கூட உதவி செய்யாத வடிவேலு? கழுவி ஊற்றும் இணையவாசிகள்!

நடிப்பில் புயலாக இருந்தாலும், பிறருக்கு உதவி செய்வதில் பூஜியமாக இருப்பவர் வடிவேலு என குற்றம்சாட்டப்படுகிறது.
குடிசையில் இருந்த தன்னை கோபுரத்திற்கு உயர்த்திய பலருக்கும், நன்றி கெட்டு செயல்பட்டதாக அவர் மீது புகார் எழுப்பப்படுகிறது.
சக நடிகர்களை இழிவாக நடத்துவது, வாய்ப்புகளை மறுப்பது போன்று பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகும் வடிவேலு மீது புதிய புகார் எழுந்துள்ளது.சக நடிகரான வெங்கல்ராவ் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு ரூபாய் கூட, இதுவரை வடிவேலு உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்கல் ராவ் வீடியோ வெளியிட்ட நிலையில், முதல் ஆளாக, சிம்பு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். கே.பி.ஓய் பாலா 1 லட்சம் ரூபாயும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடிவேலுவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த விஜய்காந்த், உயிரிழந்த போது, கூட, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வராமல் இருந்தார் வடிவேலு.தற்போது, சக நடிகருக்கே எந்த உதவியும் செய்யாமல் இருப்பதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.
=====